districts

தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ஒரு மாதத்தில் ரூ.6.86 லட்சம் அபராதம்

சேலம், ஜூன் 7- சேலம் மாநகரில் தலைக்கவசம் அணி யாத வாகன ஓட்டிகளிடம், ஒரு மாதத்தில் மட்டும் ரூ.6.86 லட்சம் அபராதம் விதித்து வசூ லிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் தலைக்கவசம் அணியா மல் செல்லும் வாகன ஓட்டிகள், மதுபோதை யில் செல்பவர்கள், செல்போனில் பேசிய படி வாகனம் ஓட்டுபவர்கள் உள்ளிட்ட  போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு  போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.  குறிப்பாக 5 ரோடு பகுதியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி செல் லும் நபர்களின் செல்போன் எண்களுக்கு இணையதளம் மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறையும் அமலில் இருந்து வருகிறது. அந்தவகையில், சேலம் மாநகரில் இணைய தளம் மூலமாக அபராதம் விதிக்கப்பட்டவர் கள், அதற்கான தொகையை செலுத்தாமல் இருந்து வந்தனர். இவர்களிடம் அபராத  தொகையை வசூலிக்க மாநகர காவல் ஆணை யர் விஜயகுமாரி நடவடிக்கை எடுத்து, “மோட் டார் வாகன வழக்கு ஆன்லைன் பேமண்ட் கண்காணிப்பு சென்டர்” என்ற பிரிவை தொடங்கி வைத்தார். இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 4 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் கள் அபராதம் விதிக்கப்பட்டவர்களின் செல் போன் எண்களை தொடர்பு கொண்டு அபராத தொகையை செலுத்துமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இந்த பிரிவு தொடங்கப்பட்டது. அந்த மாதம் ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 400 வசூ லிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மே மாதத் தில் மட்டும் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் ரூ.6 லட்சத்து 86 ஆயிரம் அபரா தம் விதிக்கப்பட்டு வசூலாகி உள்ளது. அதா வது மொத்தம் 1,107 பேர் அபராத தொகையை செலுத்தி உள்ளனர்.