சேலம், அக்.9- பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித் தல் உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த 6 மாதங்களில் ரூ.10 கோடியே 82 ஆயிரம் அபரா தம் வசூலிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட சேலம், திருப் பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்க ளில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பய ணிப்பவர்கள், முறையற்ற வகையில் பய ணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்கு களை ரயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்ட றிந்து ரயில்வே பரிசோ தனை அதிகாரிகள் அப ராதம் விதித்து வருகின் றனர். அதன்படி, கடந்த ஏப்.1 முதல் செப்.30 ஆம் தேதி வரை 6 மாதங் களில் சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பயணச்சீட்டு இல்லாமல் பய ணித்த 79,006 பேர்களிடம் இருந்து ரூ.6 கோடியே 28 லட்சத்து 48 ஆயிரத்து 869 அப ராதமாக வசூலிக்கப்பட்டது. அதேபோல், ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண் டதாக 68,681 நபர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 71 லட்சத்து 07 ஆயிரத்து 851 அபரா தமாக வசூலிக்கப்பட்டது. ரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்ற 206 நபர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 794 வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.10 கோடியே 82ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ள தாக அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.