திருப்பூர், நவ.26- தாராபுரம் அருகே விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கி, ஆக்கிரமிப்பில் இருந்த 55 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, 45 பயனாளிக ளுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிகளவு விவ சாய நிலங்களை வைத்திருந்த நிலச் சுவான்தாரர்களிடம் இருந்து நில உச்சவரம்பு சீர்திருத்த சட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியது. இதன்பின் அந்த நிலங்கள், நிலமற்ற ஏழை விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. இதன்படி திருப்பூர் மாவட்டம், தாராபுரம், தளவாய்பட்டி னம், ஊத்துப்பாளையம் பகுதிகளில் நிலச்சுவான்தாரர்களிடம் இருந்து கடந்த 2003 ஆம் ஆண்டு கையகப் படுத்திய 55 ஏக்கர் விவசாய நிலங் களை 45 பயனாளிகளுக்கு அரசு வழங் கியது. பட்டா பெற்ற விவசாயிக ளுக்கு, அவர்களுக்கான நிலத்தை அளந்து பிரித்து எடுப்பதில், கடந்த 19 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடைபெற்று வந்தது. மேலும், அந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்ததா கக் கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு வழங்கிய நிலப்பட்டாக்களுக்கு உரிய இடத்தை 45 பயனாளிகளுக்கும் உடனடியாக பிரித்து, நில அளவீடு செய்து வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இதைத்தொடர்ந்து, நில உரிமையாளர்களின் ஆக்கிரமிப் பில் இருந்து வந்த நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முயற்சியால் மீட்கப்பட்டு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 45 பயனாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. இந்நிலையில், முழுமையாக மீட்கப்பட்ட இந்த நிலங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட் சியைச் சேர்ந்த திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், பயிர் விதைத்து, விவசாயப் பணி களை தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பி.ரகுபதி, சௌந்த ரராஜன், பி.லட்சுமணன் உட்பட 45 பய னாளிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.