524 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவை, ஜூலை 27- கோவையில் சுமார் 524 கிலோ தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்த னர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராய ணனின் உத்தரவின்பேரில், தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்பவர்கள் மீது காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்ஒருபகுதி யாக கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி களில் புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வா ளர் ராஜதுரை தலைமையிலான காவலர்கள் திங்களன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் புகையிலை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ராஜஸ்தான் மாநி லத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் (40), ரஞ்சித் குமார் (26), சோகரம் (22), மாதரம் (30) மற்றும் தீபாரம் (27) ஆகிய 5 நபர் களை கைது செய்து, அவர்களிடமிருந்து 354 கிலோ எடை யுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 5 பேரை யும் சிறையிலடைத்தனர். இதேபோல், ஞாயிறன்று பேரூர் காவல் துறையினர் மேற் கொண்ட சோதனையில், 101 கிலோ குட்கா பொருட்களை பறி முதல் செய்து பீம்சன் (51) என்பவரை கைது செய்தனர். துடிய லூர் காவல் துறையினர் முல்லை நகர் பகுதியில் மேற் கொண்ட சோதனையில், முத்தீசன் (27) என்பவரது கடையிலி ருந்த 20 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து, அவரை காவல் துறை யினர் கைது செய்தனர். பொள்ளாச்சியில் குளத்தூர் பகுதி யில் செந்தில்வேல் குமார் (37) என்பவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைய டுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 49 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
ஆகஸ்ட் 5-ல் ஈரோடு புத்தக திருவிழா துவக்கம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
ஈரோடு, ஜுலை 27- ஈரோடு புத்தக திருவிழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி துவங்குகிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார். மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் ஈரோட்டில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் புத்தக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் ஈரோடு புத்தக திருவிழா 2022 புதிய பொழிவுடன், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இத்திருவிழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார். 230க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் பங்கேற்கும் மாலை நேர சொற்பொழிவுகள், உலக தமிழர் படப்பரங்கம், படைப்பாளர் மேடை, நூல் வெளியீட்டு அரங்கம், ஈரோடு மாவட்ட படைப்பாளர் அரங்கம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், சிறந்த இளம் அறிவியலாளருக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு தொகையுடன் ஜி.டி.நாயுடு விருதும் புத்தக திருவிழாவில் வழங்கப்பட உள்ளது. மாணவர்களை வாசகர்களாக வளர்த்தெடுக்க வடிவமைக்கப்பட்ட பல சிறப்பு திட்டங்களுடன் புத்தகம், அறிவு, சிந்தனை சார்ந்த ஏராளமான புதிய அம்சங்களை உள்ளடக்கிய ஈரோடு புத்தகத் திருவிழா தேசிய தரத்துடன் நடைபெற, மாநிலந்தழுவிய விதத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிகழ்வு ஒருங்கினைப்பாளர் ஸ்டாலின் குணசேகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நகராட்சி பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்
தருமபுரி, ஜூலை 27- தருமபுரி நகராட்சி பள்ளியில் கழிப்பறை வசதி ஏற் படுத்திக்கொடுக்க வேண்டும் என நகராட்சி மாதாந்திர கூட்டத் தில் திமுக உறுப்பினர் வலியுறுத்தினார். தருமபுரி நகராட்சியின் மாதாந்திர கூட்டம், திமுக நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டன் மாது தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. இதில், 25 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சத்யா பேசுகை யில், தருமபுரி நகராட்சி, 25 ஆவது வார்டில், எஸ்.வி.சாலை யில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு போதிய கழிப்பிட வசதியில்லாததால், மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து தெரிவித்த போதும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது, என்றார். இதேபோன்று 9 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் மாதை யன் பேசுகையில், குமாரசாமிபேட்டை மயானத்துக்கு செல் லும் சாலை தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. இதில், பல்வேறு இடங்களில் தரைப்பாலம் குறுகிய அளவில் அமைக் கப்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக நகராட்சி வாகனங் கள் குப்பையை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. எனவே, இதற்கான உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மன்ற உறுப்பினர்க ளின் கேள்விகளுக்கு பதிலளித்து நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது பேசுகையில், நகராட்சி கவுன்சிலர்கள் பேசிய கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என் றார்.
தமுஎகச மாதாந்திர இலக்கிய அமர்வு
திருப்பூர், ஜூலை 27 - பெருமாநல்லூர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் முதல் மாதாந்திர இலக்கிய அமர்வு நடைபெற்றது. தமுஎகச தலைவர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் க.சண்முகம் அறிக்கை வாசித்தார். முன்னதாக பிரேமா வரவேற்றார். ஆசிரியை ஜெகா ஜெரோஷா எழுதிய அனலி கவிதை நூல் குறித்து, தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவை தலைவர் ஆழ்வைக்கண்ணன் நூல் விமர்சனம் செய் தார். செயலாளர் பழனிவேல், கவிஞர் ஜெயலட்சுமி, ஆசி ரியை ஜெகா ஜெரோஷா, அருணாசலம் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகள் குறித்து, தமுஎ கச மாவட்டத் துணைத் தலைவர் செ.நடேசன் பேசினார். பொருளாளர், கே.ராமசாமி நன்றி கூறினார்.
மகள் பெயரில் இருந்த ரூ. 25 கோடி நிலத்தை விற்பனை செய்த தந்தை
திருப்பூர், ஜூலை 27- திருப்பூரில் தனக்கு பாத்தியப்பட்ட 25 கோடி மதிப்பிலானா சொத்தை தனது கையெழுத்து இல்லாமல் தந்தையே கிரயம் செய்து கொடுத்ததாக மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தார். திருப்பூர் மாவட்டம் மொரட்டுபாளையம் பகுதியை சேர்ந் தவர் மகேஸ்வரி. தனது கையெழுத்து இல்லாமல் கடந்த 25 ஆம் தேதி கிரயம் மற்றும் செட்டில்மெண்ட் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பதிவு செய்வது அறிந்த அன்றைய தினமே சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுத்த நிலையில் சார்பதிவாளர் ரத்து செய்வதாக அறிவித் திருந்தார். ஆனால் செவ்வாய்க்கிழமை மாலை வரை காத்தி ருந்து ஆவணங்களை ரத்து செய்யாமல் சார் பதிவாளர் பூபதி தங்களை ஒருமையில் பேசி அனுப்பியதாக கூறினார். எனவே தனது கையெழுத்து இல்லாமல் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தை தனது தந்தை ஏமாற்றி கிரயம் செய்திருப்பதை ரத்து செய்து, வேறு யாரும் அதனை கிரயம் செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மகேஸ்வரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
பிரதமர் கிசான் திட்டத்தில் நிவாரண தொகை பெற கால நீட்டிப்பு வழங்க கோரிக்கை
தாராபுரம், ஜூலை 27- தாராபுரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாட் சியர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி, காங்கேயம் வட் டாட்சியர் புவனேஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குனர் லீலாவதி மற்றும் தோட்டகலைத்துறையினர், மின்சார வாரி யத்தினர், பொதுப்பணித்துறையினர் உள்பட பல்துறை அதி காரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்: தாராபுரம் வட்டத்தில் உரிய அனுமதியின்றி செங்கல் சேம்பருக்கு மண் எடுக்கப்படுகிறது. மேலும் மண் எடுக்கும் லாரிகள் மிகவும் வேகமாக செல்வதால் பொதுமக்களி டையே பீதி நிலவுகிறது. மேலும் மண் எடுக்கும் லாரிகளில் தார்ப்பாய் போடாமல் செல்வதால் டூவீலர் செல்பவர்கள் மீது மண் விழுந்து பாதிப்பு ஏற்படுகிறது. தாராபுரம் பழைய அமரா வதி வாய்க்காலில் அலங்கியம் பகுதியில் பாசன வாய்க்கால் களை தூர்வார வேண்டும். மேலும் ஆகஸ்ட் 15க்குள் தூர்வ ரும்பணிகள் நிறைவடைந்தால் தான் செப்டம்பர் 1 ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் போது நெல் நடவு செய்ய விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதையடுத்து பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிக ளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை பெற வேளாண்மை துறை அதிகாரிகளை விவசாயிகளை அணுகி வருகின்றனர். இந்த தொகை வழங்க புதுப்பிக்கும் பணி என்பது கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து அலுவலகம் வாயிலாக நடைபெறவேண்டும். மேலும் இத்திட்டத்தில் நிவாரண தொகை பெற ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுகொண்டனர். இதையடுத்து இதற்கு பதிலளித்த கோட்டாச்சியர் பொதுப்பணித்துறை யினர் உடன் கலந்து பேசி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் கிசான் திட்டத்தில் கால நீடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து பரிசிலிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதைதொடர்ந்து அலங்கியம் பகுதியில் மும்முனை மின்சாரம் சப்ளை கடுமையாக பாதிக்கப்படு கிறது. இதனால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலவில்லை எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மின்வா ரிய உதவி பொறியாளர் இது குறித்து எந்த தகவலும் வர வில்லை இதையே புகாராக ஏற்று ஆய்வு செய்து நடவ டிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். கூட்டத்தின் முடி வில் விவசாயிகள் அளிக்கும் புகாரின் மீது விசாரித்து உட னுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கோட்டாட்சியர் குமரேசன் ஆலோ சனை வழங்கினார்.
கபடி போட்டி
திருப்பூர் ஜூலை 27- திருப்பூர் மாவட்ட பெண் கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி காங்கயம் ரோடு மாவட்ட கபடி கழக மைதா னத்தில் வரும் 30 ஆம் தேதி நடக்கிறது. இதில், பள்ளி, கல்லூரிகளின் பெண்கள் கபடி அணி மற்றும் மாவட்ட கபடி கழகத்தில் பதிவு பெற்ற அணி பங்கேற்க லாம் என் தெறிவிக்கப்பட் டுள்ளது.
சாலையோர வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் கைவிடாவிட்டால் போராட்டம்: சிஐடியு அறிவிப்பு
அவிநாசி, ஜூலை 27 சாலையோர வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிடக்கோரி சிஐ டியு அவிநாசி தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மகா சபைக் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. அவிநாசி பேரூராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ள னர். மேலும் வருடம் தோறும் சாலையோர வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்குப் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப் படுகிறது. இதைதொடர்ந்து பேரூராட்சி நிர் வாகம் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே சாலையோர வியாபாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் அவிநாசி பேரூ ராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளி டம் ஏலம் நபர்கள் கூடுதல் கட்டணம் வசூ லித்து வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிட்டுக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிட வலியுறுத்த வேண் டும். மேலும் இதே நிலை தொடர்ந்தால் ஜூலை 30ஆம் தேதி பேரூராட்சி முன்பு போராட்டம் நடத்துவதாக சிஐடியு அவிநாசி பொது தொழி லாளர் சங்கத்தினர் மகாசபையில் முடிவு செய்துள்ளனர். இக்கூட்டத்தில் பொதுத் தொழிலாளர் சங் கத்தின் தலைவராக ராஜன், பொதுச்செயலா ளராக ஈஸ்வரமூர்த்தி, பொருளாளராக சாம் ராஜ், துணைத் தலைவராக வெங்கடேஸ்வ ரன், செயலாளராக சசி உட்பட 11 பேர் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள னர். இந்த மகா சபைக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர் விரோதக் கொள்கை, அவிநாசி யில் நடைபெற உள்ள சிஐடியு மாவட்ட மாநாட்டில் அதிகப்படியான தொழிலாளர் களை மாநாட்டுப் பேரணிக்குப் பங்கேற்க வைப்பது குறித்து சிஐடியு மாநிலக் குழு உறுப் பினர் ஜி.சம்பத் பேசி நிறைவு செய்தார்.
திருவிழா நடத்த அனுமதி
அவிநாசி, ஜூலை 27- அவிநாசி அருகே போத்தம்பாளையம் பெரிய கருப்பராயன் கோயில் திருவிழா வுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் செவ்வாயன்று வட்டாட் சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அமைதியான முறையில் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது ராயர்பாளையம், சுள்ளிப்பாளையம், வடுகபாளையம் ஆகிய பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறிருப்பதாவது- எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திருப் பூர் ஈரோடு, கோவை என பல்வேறு பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் வழிபட்டு வரும் போத்தம்பாளையம் பெரிய கருப்பரா யன் கோயிலுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் நேர்த்தி கடனாகச் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் ஆடி மாதம் 25ஆம் தேதி திருவிழா நடத்துவதாக இருந் தது. ஆனால் திருவிழா நடத்த வட்டாட்சியர் தடை விதித்து உள்ளதாக கூறி பூசாரிகள் கோவிலுக்கு வர மறுத்து விட்டார்கள். இதனால் நாங்கள் மன வேதனையுடன் உள்ளோம். திருவிழா நடத்துவதற்கு 4,5 குடும்பத்தினர் மட்டுமே ஒத்துழைக்காமல் உள்ளனர். மீதமுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருவிழா நடத்த மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம். மேலும் நேர்த்திக் கடனுக்காக 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆடுகளை வளர்த்து வருகிறோம். இனிமேலும் அதை வளர்க்க எங்களால் இய லாது.ஆகவே திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சி யர் ராஜேஷ், திருவிழா நடத்த ஒத்துழைக்காத குடும்பத்தினர் உள்பட இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நிறைவாக அனைவரும் ஒற்றுமையுடன் எளிமையாக, அமைதியான முறையில், திருவிழா நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
கஞ்சா மற்றும் புகையிலை விற்றதாக 423 பேர் கைது
திருப்பூர் ஜூலை 27- திருப்பூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்றதாக 423 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். தமிழ்நாடு முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட் களை ஒழிக்கும் வகையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இதைதொடர்ந்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ப னையை ஒழிக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கஞ்சா விற்றதாக 65 வழக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்றதாக 423 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 424 பேரின் வங்கி கணக்குக ளில் இருந்த ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 480 முடக்கப்பட்டுள் ளது என்று திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் தெரி வித்தனர்.
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
சேலம், ஜூலை 27- ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை விடப்பட் டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள் ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி அன்று மாவட் டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறு வனங்கள் செயல்படாது. இந்த உள்ளூர் விடுமுறை செலா வணி முறிச்சட்டத்தின் கீழ் வராது என்பதால் அரசுப் பாது காப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கரு வூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பணி நாளாக செயல்படும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர் பெண் கொலையா? காவல் துறையினர் விசாரணை
உதகை, ஜூலை 27- உதகை அரசு மருத்துவமனையில் பணி யாற்றிய இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட் டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. உதகை அரசு மருத்துவமனையில் தனி யார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படை யில் பணியாற்றிய தர்ஷனா என்பவர் தனது பெற்றோருடன் உதகை மேற்கு காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கல் லட்டி பகுதியை சேர்ந்த திருமணமான 23 வயது இளம்பெண் ஒருவர் உதகை மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணி யாற்றி வந்தார். அவருக்கு கணவர் இல்லாத தால், தனது 3 வயது குழந்தை மற்றும் கண வரின் தாயாருடன் வசித்து வந்தார். கடந்த மே மாதம் 15 ஆம் தேதியன்று எனக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் இரவு பணி ஒதுக்கப் பட்டிருந்தது. அதன்பின்னர் அவரை காண வில்லை. அந்த இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப் பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழு கிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 21 ஆம் தேதி பணிக்கு வந்த என்னிடம், தனியார் ஒப் பந்த நிறுவனத்தை சேர்ந்த மேற்பார்வையா ளர் உள்ளிட்ட சிலர், “யார் வந்து எது குறித்து விசாரித்தாலும் வெளியில் சொல்லக்கூடாது” எனக்கூறி மிரட்டி தாக்கினர். இதனால் அச்சம டைந்த நான் சில நாட்களாக பணிக்கு செல்ல வில்லை. எனவே என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் உதகை மேற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமிகளுக்கு பாலியல் வல்லுறவு வளர்ப்பு தந்தைக்கு 23 ஆண்டு சிறை
ஈரோடு, ஜூலை 27- சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீபா என்பவர் திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பா ளையத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான கணேஷ் (29) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலை யில், தீபாவின் முதல் கணவருக்கு பிறந்த இரு மகள்களை யும் கணேஷ் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக வும், அடித்தும், துன்புறுத்தியும் வந்துள்ளார். இதையறிந்த தீபா, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். இதனைத்தொடர்ந்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் கணேஷ் மீது போக்சோ, சிறுமிகளை தாக்கி யது, கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்த னர். இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத் தில் நடந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு செவ் வாயன்று அளிக்கப்பட்டது. அதில், 2 சிறுமிகளை பாலி யல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிறுமிகளை தாக்கிய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுப விக்க வேண்டும் எனவும் தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இரு பிரிவுகளில் அபராதமாக ரூ.10 ஆயிரமும், அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக ளுக்கு தலா ரூ.3 லட்சம் என ரூ.6 லட்சம் நிவாரணத் தொகை யாக ஒரு மாத காலத்துக்குள் வழங்க தமிழக அரசுக்கு நீதி பதி பரிந்துரை செய்துள்ளார்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காவலர்கள் ஒருவர் கைது; 3 பேர் பணியிடை நீக்கம்
உதகை, ஜூலை 27- உதகை அருகே கஞ்சா விற்பனை யில் ஈடுபட்ட காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், இதில் தொடர்புடைய 3 காவலர்கள் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடு பட்டிருந்த சரத்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்த னர். அவரை தொடர்ந்து விசாரித்த தில், எருமாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் அமரன் என்ற காவலர் கஞ்சா கொடுத்து விற்க சொன்னதாக கூறினார். இதனால் அதிர்ச்சிய டைந்த மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆஷிஸ் ராவத், இதில் நேரடி யாக தலையிட்டு தீவிர விசார ணைக்கு உத்தரவிட்டார். இந்த விசார ணையில், 4 காவலர்கள் கஞ்சா விற்ப னையில் ஈடுபட்டது அம்பலமானது. இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், தேனி காவல் நிலையத் தில் கணேசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்ட தால் இவர் பணியிடை நீக்கம் செய் யப்பட்டார். இதைத்தொடர்ந்து கூட லூரை அடுத்த எருமாடு காவல் நிலை யத்தில் பணிபுரியும் காவலர் அம ரனை தேடி கணேசன் எருமாடு வந் தார். அங்கிருந்தபடியே கேரளா மாநி லத்திலிருந்து கஞ்சா வாங்கி அமரனி டம் விற்க கொடுத்துள்ளார். அமரன் உதகையில் கஞ்சா விற்று வந்த நிலை யில், சரத்குமார் என்பவர் கைது செய் யப்பட்டார். இதைத்தொடர்ந்து அம ரனை காவல் துறையினர் கைது செய் தனர். மேலும், அமரன் கஞ்சா விற்று வருவது குறித்து பி1 காவல் நிலை யத்தில் பணிபுரியும் விவேக் என்ற காவலருக்கும், சேரம்பாடி காவல் ஆய்வாளர் ஓட்டுநராக பணிபுரியும் உடையார் என்பவருக்கும் தெரியும். ஆனால், இதை அவர்கள் உயர் அதி காரிகளுக்கு சொல்லாமல் மறைத்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து காவலர்கள் கணேசன், உடையார், விவேக் ஆகியோரை பணியிடை நீக் கம் செய்து மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆஷிஸ் ராவத், உத்தர விட்டார். தமிழகத்தில் கஞ்சா விற்ப னையை கட்டுப்படுத்தும் நோக்கில், காவல் துறையினர் “ஆப்ரேசன் கஞ்சா 2.0” என்று கஞ்சா வியாபாரி களை கைது செய்ய தீவிர நடவ டிக்கை எடுத்து வரும் நிலையில், நீல கிரியில் போலீசாரே கஞ்சா விற்று கைதாகிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.