districts

img

5 ஆயிரம் வாக்கு சேகரிக்கும் இயந்திரங்கள் வரவழைப்பு

கோவை, ஏப்.5- 2024ஆம் ஆண்டு நடைபெறும் பாராளு மன்ற தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கும் இயந்திரம் கோவை மாவட்டத்திற்கு பெங் களூரில் இருந்து 5000 பெட்டிகள் வரவழைக் கப்பட்டு புதனன்று பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில், பல் வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னி லையில், காவல் துறையினர் பாதுகாப்புடன் தேர்தலுக்காக பயன்படுத்தக்கூடிய வாக்கு களை சேகரிக்கும் இயந்திரம் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வைக்கப்பட்டது.  இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட் டிற்கொன்று 7,579 வாக்குப்பதிவு இயந்தி ரங்களும், 4,436 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1310 வாக்குப்பதிவு சரி பார்ப்பு இயந்திரங்களும் இருப்பு வைக் கப்பட்டுள்ளன. மேலும் தற்போது, கோவை  மாவட்டத்திற்கு பெங்களூரு பெல் நிறுவனத் திலிருந்து வரப்பெற்ற 5000 புதிய வாக்குப் பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் கொண்டு  வரப்பட்டுள்ளது.  தற்போது பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலை தொடர்ந்து அங்கி ருந்து வாக்கு சேகரிக்கும் இயந்திரங்கள்  கோவை மாநகர பகுதிக்கு வரவழைக்கப் பட்டு மிகுந்த பாதுகாப்புடன் பெட்டக அறை யில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பெட்டக அறையில்  வைக்கப்பட்ட வாக்கு சேகரிக்கும் இயந்தி ரங்கள் பத்திரமாகவும், எந்த விதமான  இடையூறுகளும் ஏற்படாதவாறு மிகுந்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.