தருமபுரி, ஜூலை 10- நல்லம்பள்ளி அருகே சாலையோரம் கிடந்த 500 கிலோ அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங் கம் கிராம சாலையோரத்தில் சிறு, சிறு மூட்டைகள் கட்டி போடப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக் கள் அருகில் சென்று பார்த்த போது, ரேசன் அரிசி இருப் பது தெரியவந்தது. இதுகுறித்து நல்லம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் சண்முகசுந்தரத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ரேசன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டனர். இந்த மூட்டைகளில் சுமார் 500 கிலோ அரிசி இருக்கும் என தெரிய வந்தது. அரி சியை கைப்பற்றிய அதிகாரிகள், அரிசி மூட்டைகளை சிவில் சப்ளை குடோனில் ஒப்படைத்தனர்.