districts

img

நீலகிரியில் 5 அபாயகரமான பகுதிகள்

உதகை, செப்.1- நீலகிரி மாவட்டத்தில் பருவமழையினால் பாதிக்கப் படக்கூடிய அபாயகரமான பகுதிகளாக உதகை வட்டத்தில்  5 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்  சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், எம்.பாலாடா, கே.கே.நகர், நஞ்ச நாடு பகுதியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்  சார்பில், மாவட்ட அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகை பயிற்சி வியாழனன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் பார்வையிட்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் பருவமழைக் காலங்களில் வெள்ளத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள அபாயகரமான பகுதிகளாக உதகை வட்டத்துக்குட்பட்ட முத்தோரை, பாலாடா, நஞ்ச நாடு, குந்தா வட்டத்துக்குட்பட்ட முள்ளிகூர், குன்னூர் வட்டத்துக்குட்பட்ட குன்னூர் நகரம், கோத்தகிரி வட்டத் துக்குட்பட்ட கன்னிகா தேவி காலனி,  கூடலூர் வட்டத்துக் குட்பட்ட மேல் கூடலூர் ஆகிய 5 இடங்கள் கண்டறியப் பட்டன. அந்த பகுதிகளில் வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப்  பயிற்சி நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் மிகவும்  அபாயகரமாக கண்டறியப்பட்டுள்ள இடத்தில் வெள்ளமோ,  நிலச்சரிவோ நடக்கும் பொழுது எவ்வாறு அரசுத்துறை அலுவ லர்கள் உடனடியாக சென்று பேரிடரில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது.

மாவட்டத்தில் மிகவும் அபாயகரமான இடங்களில் ஒன்றான எம்.பாலாடா, கே.கே.நகர், நஞ்சநாடு பகுதியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் வெள்ளம் மற்றும் நிலச் சரிவில் சிக்கிய நபர்களை எவ்வாறு மீட்பது என்பது தொடர் பாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலமா கவும், படுகாயமடைந்த ஒருவருக்கு முதலுதவி மற்றும்  மருத்துவப் பரிசோதனை செய்தல் குறித்து மருத்துவத் துறை மூலமாகவும், பல்வேறு துறைகள் இணைந்து இந்த  நிகழ்ச்சி நடத்திக் காண்பித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  குறிப்பாக, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு தாங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது  குறித்தும், அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தெளிவாக ஒத்திகை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஒத்திகை நிகழ்ச்சி பார்வையாளர் கௌசல் கே.ஆர்.பரீவா,  கர்னல் பிரேம்குமார், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர்  சத்யகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலு சாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ஜெயபிரகாஷ், உதகை வட்டாட்சியர் ராஜசேகரன், நஞ்ச நாடு ஊராட்சித் தலைவர் சசிகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.