districts

img

மாதர்‌ சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

தருமபுரி, டிச.9- அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் 48  ஆவது அமைப்பு தினத்தை  முன்னிட்டு வெள்ளியன்று கோவை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாதர் சங் கத்தினர் சங்க கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கி கொண்டாடினர். தருமபுரியில், செங்கொ டிபுரம், வென்னாம்பட்டி, குண்டல்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மாதர் சங்கத்தினர் கொடியேற்றி பெண் உரிமை முழக்கங்களை எழுப்பினர். இதில், மாதர் சங்க நிர்வாகிகள், நிர்மலாராணி, எஸ்.கிரை ஸாமேரி, மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். இதேபோன்று கோவை மாவட்டத்தில் இருகூர், வடவள்ளி, மேட்டுபாளையம், கண பதி 20க்கும் மேற்பட்ட இடங்களில் மாதர்  சங்கத்தினர் சங்க கொடியேற்றி பொதுமக்க ளுக்கு இனிப்புகள் வழங்கி மாதர் சங்க அமைப்பு தினத்தை கொண்டாடினர். இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜோதிமணி, செயலாளர் சுதா, பொருளாளர் உஷா, மாநிலக்குழு உறுப் பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட திரளான பெண் கள் பங்கேற்றனர்.