திருப்பூர், ஏப். 28 - திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டத்திலுள்ள அமராவதி அணை யிலிருந்து சனியன்று மாநில தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீர் திறந்து விட்டார். திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்க ளின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளில் மொத்தம் 21,867 ஏக்கர் நிலங்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதம் 4233. 60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத் தில் உள்ள 25,250 ஏக்கர் புதிய பாசன நிலங்க ளுக்கு அமராவதி பிரதான கால்வாய் வழி யாக வினாடிக்கு 440 கன அடி வீதம் 2661.12 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் விடப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை முதல் 2025 ஆம் ஆண்டு பிப்.9ஆம் தேதி வரை 135 நாட்க ளில் 70 நாட்கள் தண்ணீர் திறப்பு 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில் 47 ஆயிரத்து 117 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 6894.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல் அமராவதி அணையிலிருந்து பாசனத்திற் காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபு ரம், கரூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய வட்டங்களில் மொத்தமாக 47 ஆயிரத்து 117 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும். விவசா யிகள் தண்ணீரை சிக்கனமாக உபயோ கித்தும் இத்துறைக்கு நீர்பங்கீட்டுப் பணிக ளில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன், செயற் பொறியாளர் (நீர்வளத்துறை) பாலமுரு கன், உதவி செயற்பொறியளார் பாலசுப்பரம ணியன், உதவி பொறியாளர் அரவிந்த், விவ சாய சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.