நாமக்கல், நவ.4- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் 42ஆவது அமைப்பு தின கொடியேற்று விழா வியாழனன்று நடை பெற்றது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் 42ஆவது அமைப்பு தினத்தை முன் னிட்டு, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய குழு சார்பில் வசந்த நகர், காவேரி ஆர்.எஸ், ஆவரங் காடு உள்ளிட்ட பகுதிகளில் வாலிபர் சங்க கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் நவீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எம்.லட்சுமணன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட திராளனோர் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்செங்கோடு நகர, ஒன்றிய பகுதியில் கொடியேற்று விழா நடை பெற்றது.சூரியம்பாளையம்,பொம்ம பாளையம்,ஆண்டிப்பாளையம்,ஆனங்கூர்.கொல்லபட்டி ஆகிய பகுதிகளில் வாலிபர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.