ரூ.40 கோடியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணி
உதகை, ஜூலை 7- ரூ.40 கோடியில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மேம்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறதென அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள் ளார். நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத் தில் நடைபெற்று வரும் ஜிப் லைன், பெரிய ஊஞ்சல், ரோலர் கோஸ்டர், பங்கீ ஜம்பிங், தொங்கு பாலம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமா னப் பணிகள், தமிழ்நாடு இளைஞர் விடுதி யில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணி கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் சனியன்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழ் நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு உள் நாடு, வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததின் மூலம் 2023 - 2024 ஆம் ஆண்டில் ரூ.32 கோடி வருவாய் கிடைத் துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மேம்ப டுத்த ரூ.40 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட் டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள இதர சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி, நவீனப்ப டுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டது, என்றார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு சுற் றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்கு நர் சி.சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மு. அருணா, கூடுதல் ஆட்சியர் கௌசிக், தமிழ் நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலா ளர் குணேஸ்வரன், உதகை படகு இல்ல மேலாளர் உதயகுமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, உதவி செயற்பொ றியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் மீட்பு
கோவை, ஜூலை 7- பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை கோவை சிங்கா நல்லூர் பகுதியில் போலீசார் மீட்டனர். கோவை மாவட்டம், சிங்காநல்லூர் நஞ்சப்பா நகர், 5 ஆவது வீதியில் உள்ள ஒரு காலி இடத்தில் ஆண் குழந்தை சடலம் கிடந்தது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்த னர். தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்த சில நாட்களே ஆன அந்த குழந் தையை வீசி சென்றது யார்? குழந்தை எப்படி இறந்தது என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நியாய விலைக்கடை விற்பனையாளர் தற்கொலை
சேலம், ஜூலை 7- சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற் பனை சங்கத்தின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி யில் நியாய விலை கடை விற்பனையாளர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் திருக்குமார் (51). இவர் பழைய சூரமங்கலம், பெரியார் நகர் பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் விற்பனையாள ராக பணியாற்றி வந்தார். நியாய விலை கடையில் விற்பனை யாகும் பணத்தை பள்ளப்பட்டி அருகே உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தினந்தோ றும் கட்டி வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பணத்தை தனது மனைவியுடன் வந்து கட்டியதாக கூறப்படுகி றது. இந்நிலையில், வெள்ளியன்று வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் உள்ளே ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசுயுள்ளது. இதையறிந்த அங்கிருந்த ஊழியர் கள் பார்த்தபோது லாரியில் ஒயர் மூலம் தூக்கில் தொங்கிய வாறு திருக்குமார் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறை யினர் சடலத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.49 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள்
ரூ.49 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் கோபி, ஜூலை 7- கோபி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சியில் ரூ.49 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பேரூராட்சித் தலைவர் மணிமேகலை பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள சலங்கபாளையம் பேரூராட்சியில் 15 ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி 5ஆவது வார்டுக்குட்பட்ட மகா லட்சுமி நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை தொட்டி அமைத்தல், 6 ஆவது வார்டுக்குட் பட்ட பள்ளிக்கூட வீதியில் வடிகாலுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைத்தல், 4ஆவது வார்டுக்குட்பட்ட காமாட்சியம் மன் கோயில் வீதியில் வடிகால் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் சபி முன்னி லையில் பேரூராட்சித் தலைவர் மணிமேகலை பழனிச்சாமி வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திமுக பவானி தெற்கு ஒன்றியச் செயலாளர் துரைராஜ், தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சத்தியமூர்த்தி, சலங்கபாளை யம் பேரூர் கழகச் செயலாளர் பழனிச்சாமி, பேரூராட்சி துணைத் தலைவர் மாலதி குணசேகரன் கவுன்சிலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
சரக்கு ரயில் மூலம் ரூ.70 கோடி வருவாய்!
சரக்கு ரயில் மூலம் ரூ.70 கோடி வருவாய்! சேலம், ஜூலை 7- சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் சரக்கு ரயில்கள் மூலம் ரூ.70.03 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவை, வடகோவை, போத்தனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம், கரூர் ஆகிய ரயில் நிலை யங்களில் இருந்து இயந்திர உதிரி பாகங்கள், உணவுப் பொருட்கள், துணிகள், மருத்துவப் பொருட்கள், உபகர ணங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவை மற்றும் பார்சல் கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்கு ரயில்கள் மூல மாக அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு கணிசமான வருவாய் கிடைத்து வரு கிறது. அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்தில் நடப்பாண் டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ரயில்களில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 559 டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதில், ரூ.70.03 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில், அதிகப்படியாக பெட்ரோலிய பொருட்கள், சிமென்ட், இரும்பு, எஃகு பொருட்கள், கொள்க லன்கள் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக் ்கப்பட்டுள்ளது. இதேபோல, சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை முதல் காலாண் டில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 251 பார்சல்கள் அனுப்பப் பட்டு ரூ.4.78 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
குடிநீர் குழாயில் ஏற்பட்ட தீடீர் உடைப்பு
குடிநீர் குழாயில் ஏற்பட்ட தீடீர் உடைப்பு மேட்டுப்பாளையம், ஜூலை 7- மேட்டுப்பாளையத்தில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட தீடீர் உடைப்பால் அவ்வழியே செல்லும் குடிநீர் இணைப்பை நகராட்சி நிர்வாக ஊழியர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத் தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. மேட்டுப்பாளையம் நக ராட்சி பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் வகை யில் பத்திரகாளி அம்மன் கோவில் செல்லும் வழியில் பவானி யாற்றின் கரையில் சாமன்னா தலைமை நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. பவானி ஆற்றுநீரை ஆதாரமாகக் கொண்டு மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் குடிநீர் திட்டம் செயல்பட்டு வரு கிறது. இந்நிலையில், 7 ஆவது வார்டு எஸ் எம் நகர் அருகே மேட்டுப்பாளையம் இரண்டாம் குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் சென்றது. பின்பு தகவலறிந்து வந்த மேட்டுப்பாளை யம் நகராட்சி நிர்வாக ஊழியர்கள் அவ்வழியே செல்லும் குடிநீர் இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். மேலும், விரைவில் சேதமடைந்த குழாய் சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விலங்கின நோய்கள் தின உறுதிமொழி ஏற்பு
விலங்கின நோய்கள் தின உறுதிமொழி ஏற்பு நாமக்கல், ஜூலை 7- உலக விலங்கின நோய்கள் தினத்தை முன்னிட்டு, அதிகா ரிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு உறுதிமொழியை சனியன்று எடுத்துக்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் கால்நடை மருந்த கத்தில், உலக விலங்கின நோய்கள் தினத்தை முன்னிட்டு, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். கால்நடை மருத்துவர்கள் விஜயமூர்த்தி, ஸ்ரீதரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்பிரகாசம், சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், மணிகண்டன், சந்திரசேகர், பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிரந்த எழுத்துகளில் திருக்குறளை எழுதி மாணவர்கள் சாதனை!
சேலம், ஜூலை 7- மேட்டூர் அருகே 1,330 திருக்குறளை கிரந்த எழுத்துகளில் எழுதி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மாதநாயக்கன்பட்டியில் காமரா சர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவராக தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், செயலாளராக தமிழ் அன்பரசி ஆகியோர் உள்ளனர். இம்மன்றத்தின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தென்னிந்திய கல்வெட்டு எழுத்து களான 3 ஆம் நூற்றாண்டு தமிழி, 5 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து மற்றும் கிரந் தம், 9 ஆம் நூற்றாண்டு சோழர் கால தமிழ் எழுத்துகள் என அனைத்தும் எழுத, படிக்க, கல்வெட்டு படி எடுக்க, கோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை, நடுகற்கள் கண்டறிந்து ஆவணப்படுத் துதல், தொல்லியல் கண்காட்சி நடத்து தல் போன்றவற்றை செய்து வருகின்ற னர். தொன்மையான தமிழை அனைவ ரும் கற்க வேண்டும். வாசித்து பழக வேண்டும். தமிழ் மொழியின் தொன் மையை அறிய வேண்டும் என விழிப்பு ணர்வு ஏற்படுத்த ‘தொன்மைத் தமிழினை கற்போம், வாசிப்போம்’ என்ற தலைப்பில் சனியன்று உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. காமராசர் நினைவு அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நி கழ்ச்சியில், தமிழாசிரியர் அன்பரசி, 9 ஆம் வகுப்பு மாணவர் நித்திஷ், மாணவி கள் தமயந்தி, நவினா, வேதஸ்ரீ ஆகி யோர் 5 ஆம் நூற்றாண்டு கிரந்த எழு த்தில் 1,330 திருக்குகளை 3 மணி நேரம் 25 நிமிடத்தில் எழுதி சாதனை படைத்தனர். இவர்களுக்கு இன்டர் நேஷனல் பிரைட் புக்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப் சந்திரதாஸ், உலக சாதனைக் கான சான்றிதழ்களை வழங்கினார்.
பால் கொள்முதல் தொகை வழங்குவதில் தாமதம்
பால் கொள்முதல் தொகை வழங்குவதில் தாமதம் சேலம், ஜூலை 7- பால் கொள்முதல் தொகையை வழங்குவதில் ஆவின் நிர் வாகம் தாமதப்படுத்துவதால், பால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம், தினமும் பல ஆயிரம் லிட்டர் பால் சேலம் ஆவினுக்கு அனுப்புகின்றனர். பால் உற்பத்தியா ளர்களுக்கான பால் கொள்முதல் தொகை 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், சில மாதங்களாக 15 நாட்களுக்கு ஒருமுறை என காலதாமதமாக வழங்கப் பட்டு வருகிறது. இதனால் தீவனம், புண்ணாக்கு, தவிடு மற்றும் மாடுகள் பராமரிப்பு, மாடுகளின் மருத்துவ செலவு களுக்கு கடன் வாங்கி செலவு செய்யவேண்டிய நிலை உள்ளது என ஆவின் பால் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தம்மம்பட்டி ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், சேலம் ஆவினில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வரை வழங்க வேண்டியகொள்மு தல் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை. அமைச்சர் கூறியபடி, மாவட்ட ஆவின் நிர்வாகம் மாதத்துக்கு 3 முறை பால் கொள்முதல் பணம் வழங்க வேண்டும், என்றனர்.