districts

img

பிரபல தனியார் கல்லூரிகளை பின்னுக்கு தள்ளிய கோவை அரசு கலைக்கல்லூரி

கோவை, ஜூன் 16- பிரபல தனியார் கல்லூரிகளை பின்னுக்கு தள்ளி கோவை அரசு கலைக்கல்லூரி தேசிய தர  வரிசை பட்டியலில் 32 ஆவது இடத்தையும், மாநில அளவில் 10 இடத்தையும் பிடித்து சாதனை  படைத்துள்ளது. விதவிதமான விளம்பரங்களின் மூலம் மூளைச்சலவை செய்து மாணவர்களையும், பெற்றோர்களையும் இழுத்து கல்லூரி வளாகத் தின் கவர்ச்சியான கட்டமைப்பை காட்டி லட்சக்க ணக்கில் நன்கொடை பெற்று கடை விரித்திருக் கும் தனியார் கல்லூரிகளுக்கு மத்தியில் இருப் பதை கொண்டு நிறைவான பணியை மேற் கொண்ட கோவை அரசு கலைக்கல்லூரி தரவ ரிசை பட்டியலில் முன்னேறியிருப்பது அனைவ ரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேசிய கல்விக் கூட தர நிர்ணய அமைப்பு  (NIRF), ஒன்றிய அரசால் 2015 ஆம் ஆண்டில்  உருவாக்கப்படும். இந்த அமைப்பின் மூலம் பல் வேறு குறியீடுகளின் அடிப்படையில் கல்லூரிக ளின் தர நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி  2022 ஆம் ஆண்டுக்கான தர நிர்ணய பட்டியலை  இந்த அமைப்பு வெள்ளியன்று வெளியிட்டுள் ளது. இதில், கோவை அரசு கலைக் கல்லூரி, இந் திய அளவில் 32 ஆவது இடத்தையும், தமிழக  அளவில் 10 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.         முதல் இடத்தில் சென்னை பிரேசிடென்சி கல்லூ ரியும், இரண்டாவது இடத்தில் லயோலா கல்லூரி யும், மூன்று மற்றும் நான்காம் இடத்தில் முறையே  பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூ ரியும், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியும் பிடித் துள்ளது. இதற்கு அடுத்தாற்போல தமிழக அள வில் 10 ஆவது இடத்திலும், கல்வி மாவட்டம்  என்கிற பெயரை பெற்ற பல தனியார் கல்லூரி கள் கோலோச்சுகிற கோவை மாவட்டத்தை பொருத்தவரையில் நான்காவ இடத்தை கோவை அரசு கல்லூரி பிடித்து சாதித்துள்ளது. பிரபலமான தனியார் கல்லூரிகளான ஸ்ரீ கிருஷ்ண அரசு கலை மற்றும் அறிவியல் கலை  கல்லூரி, ராமகிருஷ்ணா கல்லூரி உள்ளிட்ட கல் லூரிகளை பின்னுக்கு தள்ளி கோவை அரசு கலைக்கல்லூரி தரவரிசையில் முன்னேறி சாதித் துள்ளது.     

கூட்டு உழைப்பிற்கு கிடைத்த அங்கிகாரம்

கடந்த முறை தேசிய அளவில் 44 ஆவது இடத்தில் இருந்த கோவை அரசு கல்லூரி கடந்த  ஓராண்டில் கொரோனா தொற்றுக்கு பின்னர் பேராசிரியர், மாணவர்கள் என அனைவரது கூட்டு முயற்சியில் இந்த சாதனை பெற்றுள்ள தாக கோவை அரசு கல்லூரியின் முதல்வர்  கலைச்செல்வி பெருமையுடன் தெரிவித்துள் ளார். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழுக்கு அவர்  அளித்த பேட்டியில், இந்த ஆண்டு கொரோனா தொற்றுக்கு பிறகு ஒண்ணரை ஆண்டு காலத் திற்கு பிறகு கல்லூரி துவங்கப்பட்டது. கல்லூரி  துவங்கிய நாளில் இருந்தே பாய்ச்சல் வேகத்தில்  முன்னேறி செல்ல வேண்டும். எந்த நிலையி லும் மாணவர்களுக்கு சோர்வு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தினோம். பிப்பரவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை யில் எல்லா துறை தலைவர்களும், ஆசிரியர் கள், மாணவர்கள் மகிழ்வோடு பங்கேற்ற 300  நிகழ்வுகளுக்கு மேல் நடத்தியுள்ளோம். இதில்,  மாணவர்களின் ஆராய்ச்சி, கல்வி, மாணவர்க ளின் சேர்க்கை விகிதம் ஆகியவற்றில் கவனம்  செலுத்தினோம். இதேபோன்று மாநில, மாவட்ட  அளவிலான போட்டிகளில் மாணவர்களை பங் கேற்கச்செய்ததும், அவர்கள் திறமையாக பங் கேற்று பரிசுகளை அள்ளி வந்ததும் ஒட்டு மொத் த கல்லூரியையும் உற்சாக படுத்தியது. இதே போன்று என்சிசி, என்எஸ்எஸ் போன்றவைக ளில் டில்லிவரை சென்று மாணவர்கள் பங்கேற்று பெருமை சேர்த்தனர். இதேபோன்று துருக்கியில் நடைபெற்ற சர்வதேச போட்டிதயில் ஒரு மாண வர் பங்கேற்றார். இதுபோன்று கல்லூரியின் வளர்ச்சி என்பது ஒரு துறையில் மட்டுமல்லாது அனைத்து துறையிலுமான வளர்ச்சியாக இருந் தது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது பங்கேற்பு முழுமையாக இருந்தது. அனைவரது கூட்டு உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே இதனை பார்க்கிறோம். இதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவும், மேலும் முன்னேற வும் அனைவரும் இனைந்து உழைப்போம் என் றார்.