உடுமலை, ஜன.13- உடுமலை அருகே மருள்பட்டியில், 20 ஏக் கரில் நடுத்தர நகரிய திட்டத்தின் கீழ் கட்டப் பட்ட 300 வீடுகள் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன. அதை அரசின் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்த ஏழைக ளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மருள்பட்டியில், கடந்த 1994 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தால் 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சிறிய மற்றும் நடுத் தர நகரிய திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட் டது. இத்திட்டத்திற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 300 வீடுகள் கட்டப்பட்டன. ஏ,பி,சி என மூன்று பிரிவுக ளில் வீடுகளும், மேல்நிலைத்தொட்டி உட்பட கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இதையடுத்து, களிமண் பகுதியில் பெயரள விற்கு கட்டப்பட்ட வீடுகளை ஏலம் விடும் போது சிக்கல் ஏற்பட்டது. போதிய பேருந்து வசதி இல்லாத பகுதியில் இந்த குடியிருப்பு அமைந்திருந்தது, தரமில்லாத கட்டுமான பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வீடு களை ஏலம் எடுக்க அரசு அலுவலர்கள், மற் றும் இதர தரப்பினர் முன்வரவில்லை. இத னால் 300 வீடுகளும் காட்சிப் பொருளாக மாறி 20 ஏக்கர் பரப்பில் அமைந்த குடியிருப்பு வளா கம் முழுவதும் பராமரிப்பின்றி புதர் சூழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த 2012 மீண்டும் குடியிருப்பு பகுதி யில் உள்ள வீடுகளை ஏலம் விட முயற்சி மேற் கொள்ளப்பட்டது. போதிய பலன் அளிக்காத நிலையில் வீடுகளில் இருந்த ஜன்னல், கதவு கள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போகத் துவங்கின. தற்போது வீட்டின் சுவர்கள் மட்டுமே காணப்படுகிறது. புதர்மண்டி இடிந்து கிடக் கும் வீடுகளில் சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு பகுதிகளிலிருந்து கழிவு கள் எடுத்து வந்து கொட்டப்படும் இடமாக இப்பகுதி மாறி வருகிறது. இரவு நேரங்களில் நடைபெறும் இந்த அத்துமீறல்களால் குடியி ருப்பு வளாகம் குப்பைக்கிடங்காக மாறி உள் ளது. ஏற்கனவே அரசின் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்த தகுதியான ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு இந்த இடத்தை தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.