districts

img

குளத்து மண்னை செங்கல் சூளைக்கு எடுத்த 3 லாரிகள் பறிமுதல்; ஓட்டுநர்கள் 3 பேர் கைது

உடுமலை, செப்.23- விவசாய பயன்பாட்டிற்கு குளத்தில் மணல் எடுக்க வழங்கிய அனுமதியில் செங் கல் சூளைக்கு மண் எடுத்த லாரி ஓட்டுநர் கள் மூவர் கைது செய்யப்பட்டு, மூன்று லாரி கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே  உள்ள  குளத்தைத் தூர்வாரி அதில் எடுக்கப் படும் மண்னை விவசாய நிலங்களை பண்ப டுத்துவதற்காகவும், விவசாய பயன்பாட் டிற்கு உபயோகப்படுத்தவும் மாவட்ட ஆட்சி யர் அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் மடத்துக்குளம் அருகே செயல்படும் தனியார் செங்கல் சூளைக்கு விவசாய பயன்பாட்டுக்கு வழங்கிய அனும தியைத் தவறாக பயன்படுத்தி மண் விற் பனை செய்யப்படுவதாக உடுமலை கோட் டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உட னடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண் ணன் உள்ளிட்ட வருவாய் துறையினர் செங் கல் சூலையில் மண் இறக்கிவிட்டு திரும் பிய மூன்று லாரிகளுடன் ஓட்டுநர்களை பிடித்து லாரிகளைப் பறிமுதல் செய்தனர்.  மேலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மடத்துக்குளம் காவல் நிலையத்தில் வரு வாய் துறையின் சார்பில் புகார் அளிக்கப் பட்டது. புகாரின் அடிப்படையில் லாரிகள் பறி முதல்  செய்யப்பட்டு லாரி ஓட்டுநர்கள் முருக வேல், ராஜேஷ், காட்டமுத்து ஆகிய  மூன்று  பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.