districts

தொழிலாளர் குடிசைகளுக்கு மீண்டும் தீ வைப்பு

நாமக்கல், மார்ச் 22- நாமக்கல் அருகே தொழிலாளர்கள் தங்கி யிருந்த குடிசை தீயில் எரிந்து நாசமாகின. குடிசையில் யாரும் இல்லாததால் நல்வாய்ப் பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல், புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதா சிவம் ஆகியோருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இங்குள்ள  கொட்டகைகள் மற்றும் அங்கு வேலை செய் யும் பிற மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீடுகளுக்கு கடந்த வாரம் அடையா ளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இதில்  10 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து சேத மானது. இந்த சம்பவங்கள் தொடர்பாக 6 பேரை ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜேடர்பாளையம் சரளை மேடு பகுதியில் துரைசாமி (57) என்பவர், தனக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்ய குடிசை வீடுகள் அமைத் திருந்தார். அதில் ஒரு கொட்டகையில் 3 டிராக் டர்களை நிறுத்தி வைத்திருந்தார். செவ்வா யன்று நள்ளிரவில் கொட்டகைக்கு பின்புறம்  வந்த அடையாளம் தெரியாத நபர்கள், தீ  வைத்தனர். இதில் குடிசைகள் எரிந்தன. மேலும், கொட்டகையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த டிராக்டர்களும் தீப்பிடித்து எரிந் தன. இதை பார்த்த துரைசாமி, ஓடிவந்து டிராக் டரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப் போது கூரையில் எரிந்து கொண்டிருந்த தீ அவர் மீது விழுந்தது. இதில் அவருக்கு தீக்கா யங்கள் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக் கத்தினர் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள  ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த னர். இதன்பேரில், கோமதி தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசையில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக  உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. டிராக்டர்கள் தீக்கிரையாகின. இதே போல் ஜேடர்பாளையம் - நல்லூர் செல்லும்  சாலையில் பழனிச்சாமி (55) என்பவர் கூரை யின் மீது தகரம் வேய்ந்து வீட்டில் குடும்பத்து டன் வசித்து வருகிறார். செவ்வாயன்று நள்ளி ரவில் இவரது வீட்டின் முன்பகுதியில் திடீ ரென தீப்பிடித்தது. இதை பார்த்து உள்ளே படுத்திருந்தவர்கள், வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். அதற்குள் வீடு முழுவதும் தீ  பரவி, அதிலிருந்த 10 மூட்டை அரிசி, ரூ.30 ஆயிரம், பிரிட்ஜ், பீரோ, கட்டில் மற்றும் ஆவ ணங்கள் என அனைத்தும் தீயில் எரிந்தன. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சி யர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசா ரணை நடத்தினர். மேலும் கடந்த சில நாட்க ளாக பரமத்திவேலூர் பகுதியில் தொடர்ந்து தீ  வைப்பு சம்பவங்களும் நடந்து வருவதால் பதட் டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதைய டுத்து பரமத்திவேலூர் துணை காவல் கண்கா ணிப்பாளர் கலையரசன் தலைமையில் 5க்கும் மேற்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கள், காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வா ளர்கள் என 250க்கும் மேற்பட்ட போலீசார் அப் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.