திருப்பூர், ஜன. 17 - திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், நொய் யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் இணைந்து நடத்திய திருப் பூர் பொங்கல் திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாயன்று, நொய்யல் நதிக்கரையின் இருபுறமும், 3 ஆயிரம் பெண்கள் பொங்கல் வைத்து அசத்தினர். இந்த சமூக நல்லிணக்க பொங்கல் விழா வில் திருப்பூர் மாநகரில் உள்ள அனைத்து தரப்பட்ட பெண்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி னர். செவ்வாயன்று காலை ஆறு மணி முதல் பொதுமக்கள் திரளானோர் பொங்கல் வைக் கும் நிகழ்வில் பங்கேற்றனர். நொய்யல் நதிக் கரையில் தென் கரையில் 1260 பேரும், நொய் யல் நதியின் வடகரையில் 1840 பேரும் பங் கேற்று பொங்கல் வைத்தனர். 3000 குடும்பங்கள் இணைந்து வைத்த சமூக நல்லிணக்க பொங்கல் விழாவில் அனைவருக்கும் பச்சரிசி, வெல்லம், முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், கற்பூரம், தீப்பெட்டி, பொங்கல் பானை, அரிசி கழியும் தட்டு, கரண்டி இவை அனைத்தும் அடங்கிய பை தேவையான அளவு குடிநீர், அடுப்பு பற்ற வைக்கும் விறகு, துணி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. திருப்பூர் பொங்கல் திரு விழாவில் மகளிர் பாரம்பரிய கலையான கும் மியடித்து கொண்டாடினர். இந்த விழாவை காண பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். இந்த நிகழ்வில் மாந கராட்சி மேயர் ந.தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, திருப்பூர் மாவட்ட ஆட் சியர் எஸ்.வினித், திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயண், காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற் றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்பின் மாலையில் யுனிவர்சல் திரை யரங்கம் அருகில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட் டம், காவடியாட்டம், இன்னிசை கலைஞர்க ளின் நாட்டுப்புற பாடல்களின் கச்சேரி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.