districts

4 ஆண்டுகளில் 260 குழந்தைகள் விற்பனை?

நாமக்கல், மே 18- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பிறந்த 260 குழந்தைகளின் விவரங்கள் தெரியாததால்,அத்தனை குழந்தைகளும் விற்கப்பட்டதா என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி உள்பட 9 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, கைது செய்யப்பட்டவர்கள் கூறியதை தொடர்ந்து, அந்த கால கட்டத்திற்குள் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் தொடர்பாக கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.கடந்த 4 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 300 குழந்தைகள் பிறந்திருப்பதும், அதில் 260 குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் சிபிசிஐடி போலீசாரிடம் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 260 குழந்தைகளின் பெற்றோர் முகவரிகளை வைத்துக் கொண்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.குழந்தைகள் விற்பனை வழக்கில் மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைதாகியுள்ளார். பெங்களூரை சேர்ந்த ரேகாவைசிபிசிஐடி போலீசார் கைது செய்து,அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;