திருப்பூர், ஜூன் 25- ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் ்தையை உடனடியாக பேசி முடித்திட கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் ஜூன் 24 தேதி தொடங்கிய 24 மணி நேர உண் ணாநிலை போராட்டம் செவ்வாயன்று நிறைவடைந்தது. போக்குவரத்துக் கழகங்களை பாது காக்க வரவுக்கும் செலவுக்குமான வித் தியாச தொகைக்கான நிதியினை பட் ஜெட்டில் ஒதுக்கிட வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடன டியாக பேசி முடித்திட வேண்டும். 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்ற பணியாளர் களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் களை உடனடியாக வழங்க வேண்டும். 2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலா ளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூ தியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் ஒப்பந்தப்படி ஓய்வூதிய முறைப் படுத்தி வழங்க வேண்டும். காலிப்பணி யிடங்களில் நிரந்தர தொழிலாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இறந்து போன தொழிலாளர்களின் வாரிசுக ளுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு இதர துறை ஊழியர்களைப் போல் மருத் துவக் காப்பீட்டு திட்டத்தை அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் ஜூன் 24 தேதி தொடங்கிய 24 மணி நேர உண்ணாநிலை போராட்டம் செவ்வா யன்று நிறைவடைந்தது. திருப்பூர் பணிமனையில் நடை பெற்ற போராட்டத்தை போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பன்முக தலை வர் என்.முருகையா முடித்து வைத் த்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன், செயற்குழு உறுப்பினர், கே.உன்னிகிருஷ்ணன், சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.