திருப்பூர், மார்ச் 13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத் தான தியாகிகளில் ஒருவரான இடுவாய் கே. ரத்தினசாமியின் 21 ஆம் ஆண்டு நினைவஞ் சலி நிகழ்ச்சி எழுச்சியுடன் கடைப்பிடிக்கப் பட்டது. இடுவாய் கிராமத்தில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகம் முன்பு இருந்து ரத்தினசாமி நினைவு தின ஊர்வலம் தொடங்கியது. இடு வாய் கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியா கச் சென்று இடுவாய் ஊராட்சி மன்ற அலுவ லகம் முன்புள்ள தியாகி ரத்தினசாமியின் நினைவிடம் முன்பாக நிறைவடைந்தது. அங்கு செங்கொடியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ் உயர்த்தி வைத்தார். இதையடுத்து ரத்தினசாமி நினைவு ஸ்தூ பிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல் ராஜ், மாநில குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்து கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.ராஜகோபால், கே.உன்னிகிருஷ் ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி, இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணே சன் மற்றும் தியாகி ரத்தினசாமி குடும்பத்தார் உள்பட கட்சி அணியினர், வாலிபர் சங்கத்தி னர், விவசாயிகள், தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் உள்பட பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து இடுவாய் மைதானத் தில் மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலாளர் கே. கருப்பசாமி தலைமையில் நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சாமு வேல் ராஜ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் உரை யாற்றினார். ஊத்துகுளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊத்துக் குளி கமிட்டி அலுவலகம் முன்பு நடை பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கு.சரஸ்வதி, தியாகி ரத்தினசாமியின் நினைவை போற்றி உரை நிகழ்த்தினார். மார்க்சிஸ்ட் கட்சியின் கமிட்டி உறுப்பினர்கள் கை.குழந்தைசாமி, ஆர்.மணியன். வாலிபர் சங்க மாவட்ட பொரு ளாளர் கு.பாலமுரளி, ஊத்துக்குளி கமிட்டி பொருளாளர் ச.விக்னேஷ் விவசாயத் தொழி லாளர் சங்க கமிட்டி உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.