கோவை, அக்.10- குடிநீர் வடிகால் வாரிய பணியாளர் களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு வாட்டர் சப்ளை மற்றும் டிரெயினேஜ் போர்டு ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் வாரியம் பணியாளர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்க வேண் டும். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு சட்டப் படியான போனஸ் வழங்க வேண்டும். ஊதிய சுரண்டலுக்கு துணைபோகும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்திட வேண்டும். தமிழக முதல்வரின் தேர் தல் வாக்குறுதிப்படி 10 ஆண்டுகால பணி முடித்த ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு வாட்டர் சப்ளை மற்றும் டிரெயி னேஜ் போர்டு ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐ டியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பாரதி பார்க் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் நிர்வாகி ஏ.பிரான்சிஸ் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ண மூர்த்தி, குடிநீர் வடிகால் வாரிய சங்க பொதுச்செயலாளர் ஆர்.சரவணன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். இதில், சங்கத்தின் நிர் வாகிகள் எஸ்.பெலிக்ஸ், எம்.சசிகுமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில் பி.சக்திவேல் நன்றி கூறினார்.