கோவை, ஆக.8- கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலை தயார் நிலையில் உள்ளதால், விரை வில் திறக்கப்பட உள்ளது. கோவை மாநகராட்சியில் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி பணிகள், சீர்மிகு நகர திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குறிச்சி குளத்தை சுற்றிலும் மின் விளக்குகள், நடை பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்தொடர்ச்சியாக, குறிச்சி குளம் ரவுண்டானவின் மையத்தில் தமிழ் எழுத்துக் களால் ஆன திருவள்ளுவர் சிலை அனை வரது கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த திருவள்ளுவர் சிலை 2.50 டன் எடையில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப் பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையின் நெற்றி யில் “அறம்” என்ற வார்த்தை இடம்பெற் றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாலை மற்றும் இரவு நேரங்களில் விளக்குகளால் ஜொலிக் கும் வண்ணம் இச்சிலை வடிவமைக்கப்பட் டுள்ளது. கூடிய விரைவில் இவை மக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது. இச் சிலை திறக்கப்பட்டால் கோவையின் ஸ்மார்ட் சிட்டி பகுதிகளில் முக்கியமான அடையாள மாக குறிச்சி பகுதி திகழும் என்பது குறிப்பிடத் தக்கது.