districts

img

2.07 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன

கோவை, செப்.21- 238 வேலைவாய்ப்பு முகாம் நடத் தப்பட்டு, 2,07,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதென, அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித் துள்ளார். கோவை மாவட்டம், ஈச்சனாரியி லுள்ள ரத்தினம் கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் சனியன்று, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் மாபெரும் தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் துவக்கி வைத்து, பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம்  வழங்கப்பட்ட போட்டித்தேர்வுகளுக் கான பயிற்சி வகுப்பில் படித்து, தேர்வுக ளில் வெற்றிப்பெற்று அரசுப்பணியில் உள்ள 4 அரசு அலுவலர்களுக்கு பாராட் டுச் சான்றிதழை அமைச்சர் வழங்கி னார். இதன்பின் அவர் பேசுகையில், தமிழ் நாடு முதல்வர் பல்வேறு தொழில் நிறு வனங்களை நம் மாநிலத்தில் தொழில் தொடங்க ஊக்குவித்து, அதன்மூலம் 5  லட்சம் பேருக்கு தனியார் நிறுவனங்க ளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 238 வேலைவாய்ப்பு முகாம்  நடத்தப்பட்டு, 2,07,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, சனியன்று நடைபெற்ற இம் முகாமில் 250 நிறுவனங்கள் கலந்து கொண்டன. படித்து முடித்துள்ள இளை ஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ற தகுதி யான நிறுவனங்களை தேர்வு செய்து  பணியாற்ற ஒரு வாய்ப்பு உருவாக்கி  தரப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத் திக் கொள்ளவேண்டும். வாழ்க்கையில் முன்னேற அதைப்பற்றிய சிந்தனை வேண்டும், நம்மால் முடியும் என்ற நம் பிக்கையுடன் வாழ வேண்டும். அதற் கான முயற்சியினை தொடர்ந்து செய்து கொண்டு இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணை யரே, உங்களுக்கு சிறந்த ரோல்மாட லாக உள்ளார். அவர், டிஎன்பிஎஸ்சி தேர்வில் முதலிடம் பெற்று இளநிலை உதவியாளராக சாதாரண நிலையில் தன்னுடைய வேலையினை தொடங்கி,  அதன்பிறகு ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற் றிப்பெற்று இன்று இத்துறையின் ஆணையராக உயர்ந்துள்ளார். நம் முடைய கோவை மாவட்ட ஆட்சியர், மிக இளவயதிலே மாவட்ட ஆட்சிய ராக பணியாற்றி வருகின்றார், என்றார். இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை  அரசு் செயலாளர் கே.வீரராகவ ராவ்,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை  ஆணையர் இ.சுந்தரவல்லி, மாவட்ட  ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி, மாநகராட்சி மேயர் ஆர். ரங்கநாயகி, ரத்தினம் குழும நிறுவ னங்களின் தலைவர் மதன் ஆ.செந் தில், துணை மேயர் ரா.வெற்றிச்செல் வன், தூய்மைப் பணியாளர் நல வாரிய  மாநில துணைத்தலைவர் கனிமொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.