கோவை, ஆக.17- கோவையில் இரண்டு சந்தன மரங்களை அடையாளம் தெரி யாத நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது குறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, குறிச்சி ஹவுஸிங் யூனிட் பகுதியில் நர்சரி பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட காலியிடம் ஒன்று உள்ளது. இந்த இடத்திற்கென பாதுகாவலர் யாரும் இல்லை. இங்கு சுமார் 20 ஆண்டுகள் நன்கு வளர்ந்த இரண்டு சந்தன மரங்கள் வளர்ந் திருந்தது. இந்நிலையில், வியாழனன்று அதிகாலை அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு மரங்களையும் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் சுந்தராபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.