திருப்பூர், பிப்.12- ஊத்துக்குளியில், கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனை செய்த வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும், 2 கிலோ கஞ்சா சாக்லெட்கள் பறிமு தல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், ஊத் துக்குளி பகுதியில் வட மாநி லத்தைச் சேர்ந்த சிலர் கஞ்சா சாக்லேட்டை ரயில் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், ஊத்துக்குளி போலீ சார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, பூசாரிபா ளையத்தில் சந்தேகப்படும் விதமான நபர்களிடம் விசா ரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதேபகுதி யில் தங்கி பனியன் நிறுவ னத்தில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாகதிப் மாலிக் என்பவர் ஒடி சாவிலிந்து ரயில் மூலம் கடத்தி வந்து கஞ்சா சாக் லெட் விற்பனை செய்தது தெரியவந்தது. இதைதொ டர்ந்து சாகதிப் மாலிக்கை கைது செய்த போலீசார், விற் பனைக்காக வைத்திருந்த 2 கிலோ அளவுள்ள கஞ்சா சாக் லெட்களையும் பறிமுதல் செய்தனர்.