சூலூர், ஏப்.3- சூலூர் நீலாம்பூர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத் திருந்த இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர் களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சூலூர் நீலாம்பூர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படை யில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு காவல்துறை யினர், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட னர். அப்போது, விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கணேசன் (36) மற் றும் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிர மணியன் (40) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களி டமிருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சா, ரூ.18,200/- பணம், மூன்று சக்கர வாகனம்-1 மற்றும் இரண்டு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இத னையடுத்து கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.