திருப்பூர், ஜன.9 - அவிநாசி அருகே டாஸ்மாக் மது பானக் கடைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் மறியல் செய்த 16 பேர் மீது காவல் துறையி னர் பொய் வழக்குப் பதிவு செய்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி தண்ணீர் பந்தல் நரிக்குறவர் காலனி அருகே அதிமுக ஆட்சிக் காலத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் அப்பகுதி பொது மக்கள் திரண்டு அந்த ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அத்துடன் மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச்செயலாளர் அ. ஈஸ்வரமூர்த்தி, மூத்த தலைவர், அவி நாசி ஒன்றியக் கவுன்சிலர் பி.முத்து சாமி, பி.பழனிச்சாமி மற்றும் 10 பெண்கள் உள்பட 16 பேர் மீது அவிநாசி காவல் துறையினர் பல்வேறு பிரிவு களில் வழக்குப் பதிவு செய்த னர். இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில், நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய் யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவிநாசி காவல் துறையினர் இந்த வழக்கில் திட்ட மிட்டு தாமதம் செய்து பல ஆண்டுக ளாக அலைக்கழித்தனர். கடந்த ஜன.7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு விசா ரணைக்கு வந்தது. இதில் தமிழக அர சின் அரசாணையை மேற்கோள் காட்டி, மதுபானக் கடைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது காவல் துறை பதிவு செய்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் தரப்பில் ஆஜரான வழக் கறிஞர் வை.ஆனந்தன் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நீதித்துறை நடுவர் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து குற்றம் சாட்டப்பட்ட 16 பேரை யும் விடுவித்தார்.