திருப்பூர், டிச.28- திருப்பூர் மாநகராட்சி, லட்சுமி நகர், குலாலர் திருமண மண்டபத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை யின் சார்பில் டிசம்பர் 28 முதல் ஜனவரி 11 வரை மாநில அளவில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடை பெறுகிறது. முதல் நாள் சனியன்று இக்கண் காட்சியை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகி யோர் துவக்கி வைத்துப் பார்வையிட் டனர். இக்கண்காட்சியில் (எக்ஸ்போ) காட்சிப்படுத்தி அரசு வழங்கும் 30 சதவீதம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில், 50 கைத் தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து 5 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங் கங்கள் பங்கு பெற்று 50 அரங்குகள் அமைத்து கைத்தறி துணி ரகங்கள் விற்பனைக்கு வைத்துள்ளன. கைத்தறி அமைச்சர் காந்தி கூறு கையில், 2019-2020ஆம் ஆண்டு 4 ஆவது அகில இந்திய கைத்தறித் துறை கணக்கெடுப்பின்படி, திருப் பூர் மாவட்டத்தில் 10ஆயிரத்து 147 கைத்தறி நெசவு மற்றும் தொடர்பான உப தொழில் புரிபவர்களாக உள்ள னர். 2023-2024 ஆம் ஆண்டில், திருப் பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் ரூ. 50.32 கோடி மதிப்பில் கைத்தறித் துணி ரகங்களை உற்பத்தி செய்து, ரூ.58.22 கோடிக்கு விற்பனை செய் துள்ளன. 2021-2022 முதல் 2024-2025 ஆம் ஆண்டு டிச.16 முடிய ரூ.3.18 கோடி தள்ளுபடி மானியம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்க ளுக்கு பெறப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ், கைத் தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செய லர் வே.அமுதவல்லி, கைத்தறி இயக் குநர் அ.சண்முகசுந்தரம், மேயர் ந. தினேஷ்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கண்காட்சி ஜன வரி 11 வரை மொத்தம் 15 நாட்க ளுக்கு நடைபெறும்.