அரசு போக்குவரத்து ஊழியர்களின் 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பேசிமுடிக்க வேண்டும். அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போக்குவரத்து பணிமனைகள் முன்பு சிஐடியு மற்றும் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டம், சுங்கம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.