அவிநாசி, டிச.11- மகாகவி பாரதியாரின் 141 ஆவது பிறந்தநாள் விழா அவி நாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பாரதியின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வாக நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார் பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந் நிகழ்வு ஆசிரியர் க.சம்பத்குமார் தலைமையில் துவங்கியது. அவி நாசி நல்லது நண்பர்கள் அறக் கட்டளை செயலாளர் கோ.வெ.ரவி வாழ்த்துரை வழங்கினார். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ஈஸ்வரன் மாலை அணிவித்து சிறப்பு செய்தார். திருப்பூர் தமுஎகச மாவட்டச் செயலாளர் பி.ஆர். கணேசன் சிறப்புரை வழங்கினார். அவிநாசி துளிர்கள் சமூக அறக் கட்டளை சார்பாக ஸ்ரீகண்டன் மற்றும் காங்கிரஸ் இயக்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் பொறுப்பாளர் ச.நட ராஜன், வேலாயுதம்பாளையம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாமியப்பன், தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் இயக்கச் செயலாளர் இராஜேந் திரன், தமிழ்நாடு அறிவியல் இயக் கச் செயல்பாட்டாளர் ஆசிரியை க. பரமேஸ்வரி , மாதர் சங்க இயக்கப் பொறுப்பாளர் அங்குலட்சுமி மற்றும் கவிஞர் நீரோடை மகேஸ் வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் மகாகவி பாரதியின் பாடல் உண்டு, உரைவிடப் பள்ளி மாணவர்களால் சேர்ந்திசைப் பாடலாக நிகழ்த்தப்பட்டது. கவிஞர் மகேஸ்வரனின் “மெளனம் திறந்த நாற்காலி” நூல் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. தீக்கதிர் இதழின் நிருபர் அருண் நன்றி கூற விழா நிறைவுற்றது.
தாராபுரம்
மகாகவி பாரதியாரின் 141 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தாராபுரம் - தளவாய்பட்டிணம் சாலையில் உள்ள அலுவலகத்தில் பாரதியாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. தமுஎகச நிர்வாகி சீரங்கராயன் தலைமை தாங்கினார். தமுஎகச தாராபுரம் செயலாளர் ஆ. மணியன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்குளி
மகாகவி பாரதியாரின் 141 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகா கமிட்டி அலுவலகத்தில் ஞாயிறன்று பாரதி யார் படத்திற்கு மலர் மாலை அணிவித்து சிறப்பு செய்யப் பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்பிர மணியன், ஆர்.குமார், தாலுக்கா கமிட்டி உறுப்பினர்கள் கை. குழந்தைசாமி, வி.கே.பழனிசாமி, ஆர்.மணியன், க.பிரகாஷ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
வாரணாசியில் பாரதியார் சிலைக்கு மாநில அமைச்சர் சாமிநாதன் மரியாதை
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தினை புனரமைத்து காணொளி காட்சி வழியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வாரணாசியில் கலந்து கொண்ட மாநில செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அங்கு அமைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாரின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மருத்துவர் இரா.செல்வராஜ், மகாகவி பாரதியின் குடும்பத்தார் பங்கேற்றனர்.