சேலம், டிச.11- மகாகவி பாரதியாரின் 141 ஆவது பிறந்த நாள் விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் ஞாயி றன்று கொண்டாடப்பட்டது. மகாகவி பாரதியாரின் 141 ஆவது பிறந்த நாள் விழாவான ஞாயிறன்று பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் கொண்டா டினர். அதன்ஒருபகுதியாக சேலம் டவுன் ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள பாரதி யார் சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் – கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. பாரதியைப் பற் றிய கரிசல் குழுவினரின் பாடலைப்பாடி, தமு எகச மாவட்ட தலைவர் மேட்டூர் வசந்தி தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். அப்போது, எழுத்தாளர் கடற்கரை தொகுத்த “யாமறிந்த புலவன்” எனும் நூலை மகேந்திரா கல்விக் குழுமத்தின் செயல் இயக்குநர் இரா.சாம்சன் இரவீந்தி ரன் வெளியிட கருப்பூர் ராஜா கிரானைட்ஸ் எம்.கே.யசோதரன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், அகில இந்திய வழக்கறி ஞர் சங்கத்தின் சேலம் கிளை தலைவர் ஆர். மாசிலாமணி, தமுஎகச மாவட்ட செயலா ளர் கண்ணன், தாரை குமரவேல், சண்முகா மருத்துவமனை மருத்துவர் பன்னீர்செல் வம், தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல் பாட்டாளர் ஆர்.கே.லால், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மேனாள் மாவட்ட தலைவர் ஜோதி லட்சுமி உட்பட பாரதி உணர் வாளர்கள் கலந்து கொண்டனர். பாலம் வாச கர் சந்திப்பு ஒருங்கிணைப்பாளர் ப.சகஸ்ர நாமம் நன்றி நவிலலுடன் நிகழ்ச்சி நிறை வடைந்தது.
திருச்செங்கோடு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் திருச்செங்கோடு பகுதி கிளைகள் சார்பில் ஞாயிறன்று கிளைத் தலைவர் ஆர்.நந்தகோபால் தலைமையில் பாரதியார் பிறந்த நாள் கூட்டம் நடைபெற் றது. இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் தி.த.மணி “பாரதியார் வாழ்க்கை வரலாறு” குறித்து சிறப்புரையாற்றினார். இதில், தமுஎகச மாவட்ட செயலாளர் எஸ்.சேகரன், மாவட்ட துணைத்தலைவர் ஜி.கோபி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.சி.ராமச்சந்திரன், எஸ்.ரமேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இறுதியாக நகரக்கிளை செயலாளர் எம். நித்தியானந்தன் நன்றி கூறினார்.