கோவை, மே 19- பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியை, இவரது உறவினரான முருகன் (47) என்பவர் மீது புகார் அளிக்கப் பட்டிருந்தது. இதனையடுத்து, வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்த னர். மேற்கண்ட நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். இதனை யேற்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, முருகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.