districts

img

பளு தூக்குதலில் 14 வயது மாணவர் சாதனை

திருப்பூர், ஜூன் 5- திருப்பூரில் 14 வயது மாணவர் பளு தூக் குதலில் 150 கிலோ பளு தூக்கி முந்தைய சாத னையை முறியடித்து  நோபல் புக் ரெக்கார்ட்  அங்கீகார சான்றிதழ் பெற்றார். திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஆதித்யா. தனியார் பள்ளியில் பயின்று வரு கிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம்  கொண்ட இவர், தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.  பளு தூக்குதலில் ஏற்கனவே கோவை யைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 135 கிலோ  பளு தூக்கி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் 140 கிலோ  பளு தூக்கி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்  சாதனைக்கு அனுப்பி உள்ளார். அது அங்கீ காரம் பெற்று ஞாயிறன்று கோவையில் நடைபெற்ற நிகழ்வில் சாதனைக்கான அங்கீ காரச் சான்றிதழைப் பெற்றார். இந்நிலை யில் தன்னுடைய 140 கிலோ சாதனையை முறியடிக்கும் வகையில் ஞாயிறன்று 150  கிலோ எடையுள்ள பளு தூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார். இத னையும் உலக சாதனை அங்கீகாரம் பெற  அனுப்பி இருப்பதாக அவர் தெரிவித்துள் ளார்.