திருப்பூர், மார்ச் 5- 12 ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா அனுப்பர்பாளை யத்தில் வாலிபர் சங்கம் சார்பில் நடை பெற்றது. இதில், ஏராளமான பொதுமக் கள், குழந்தைகள் பங்கேற்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனுப்பர்பாளையம் கிளைகள் சார்பில் 12 ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா மார்ச் 2,3,4 ஆகிய நாட்களில் ஆத்துப்பாளையம் சாலை அனுப்பர்பாளையத்தில் நடைபெற் றது. சனிக்கிழமை அனுப்பர்பாளையம் ஏகிளை தலைவர் ஏ.நாகேந்திரன் தலை மையில் ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சு போட்டி ஆகியவை நடைபெற் றன. இதைத்தொடர்ந்து ஞாயிறன்று அனுப்பர்பாளையம் ஏ கிளைச் செயலா ளர் ஆர்.ஹின்ஸிலி தலைமையில் கோலப்போட்டி, குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம் உட்பட பல போட்டிகள் நடைபெற்றன. மாலை பி கிளைச் செயலாளர் வி.செந்தில் மணி தலைமையில் மேடை நிகழ்ச்சிகள் மற் றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அருள், மாவட்டச் செயலா ளர் செ.மணிகண்டன் ஆகியோர் பரி சளித்து வாழ்த்தி பேசினர். மாவட்டப் பொருளாளர் கே.பாலமுரளி, நகரத் தலை வர் பி.ரகுபதி, நகரச் செயலாளர் எஸ். வசந்த், நகரக்குழு உறுப்பினர்கள் எஸ். காவியா, பி.சதீஷ்குமார், சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், முன்னாள் நகரச் செயலாளர் பி.சின் னச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.