districts

ஒரே நாளில் 12 இருசக்கர வாகனம் திருட்டு பொதுமக்கள் அதிர்ச்சி – காவல்துறையினர் கலக்கம்

கோவை, ஜூன் 16- கோவையில் ஒரே நாளில் 12 இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில்,  மதுரையை சேர்ந்த கண்ணன் (34), என்பவர் கோவை மாவட் டம், இடையர் வீதியில் தங்கி நகை பட்டறையில் வேலை  செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  தனது இருசக்கர வாகனத்தை உறவினரிடம் கொடுத்து விட்டு மதுரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அந்த உறவி னர் சலிவன் வீதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு,  சிறிது நேரம் கழித்து வந்து பார்த்துள்ளார். அப்போது இருசக் கர வாகனம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த  அவர், கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து வெரைட்டிஹால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று கோவை பந்தையசாலை, ரத்தினபுரி, செல்வபுரம், போத்தனூர், பீளமேடு, சரவணம்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போனது  குறித்து, வாகனங்களின் உரிமையாளர்கள் அந்ததந்த காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வாகனங்களை திருடி சென்றவர்கள் யார்? வாகனங்கள் எங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரில் ஒரே நாளில் 12 இருசக்கர வாகனங் கள் திருடு போன சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சி யையும், காவல்துறையினர் மத்தியில் கலக்கத்தையும் ஏற் படுத்தியுள்ளது.

;