districts

img

கூட்டுறவு வங்கியில் ரூ.12 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு

கோவை, நவ.18- நடப்பாண்டில் கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணம் செய்யப்பட் டுள்ளது என கூட்டுறவுத்துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், வடகோவை யிலுள்ள சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடையினை  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு, நுகர்வோர்களுக்கு 2.5 கி.கி எடையுள்ள எரிவாயு உருளை களை வழங்கினார். இதன்பின், சிந்தா மணி வளாகத்தில் உள்ள மளிகை கிடங்கின், மளிகை பொருட்களின் இருப்பு, பாக்கெட் செய்யும் விதத்தினை  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டு பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.  இதனையடுத்து அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், நடப்பாண்டு கூட்டுறவு வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதுவரை 9,51,956 பேருக்கு ரூ.7,166.49 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண் டில் 1.56 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு,

1.28 லட்சம் பேருக்கு ரூ.848.1 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் கூடு தல் கவனம் செலுத்தப்பட்டு, 697 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 1.88 லட்சம் விவசா யிகளுக்கு ரூ.1,831 கோடி கடனும், கால்நடைகளுக்கான கடன் 1.76 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.801 கோடி கடனும், நகைக்கடன் 14.51 லட்சம் பேருக்கு ரூ.5,013 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 1.17 லட்சம் மகளிர் உதவிக் குழுவிற்கு ரூ.2,755 கோடி தள்ளுபடி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதியதாக 14,457 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.474 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட் டில் தற்போது 22,923 பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதில், ரூ.66,676 கோடி வைப்புநிதியாக வைக்கப்பட் டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் செப்டம்பர் மாதத்தி லிருந்து தற்போது வரை 8.47 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டு, அதற்கு 1.21 லட்சம் விவசாயி களுக்கு ரூ.1,616.08 கோடி வழங்கப் பட்டுள்ளது. மேலும்,1,058 விவசாயி களுக்கு கொள்முதல் செய்ததற்கான தொகை ரூ.13.05 கோடி வழங்கப் படவுள்ளது என ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வரு வாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், கோவை மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண்மை இயக்குநர் டி.பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.