அரசு ஊழியிடம் ரூ.11 லட்சம் மோசடி
அரசு ஊழியிடம் ரூ.11 லட்சம் மோசடி உதகை, ஏப்.26- நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த அரசு ஊழிய ருக்கு முகநூல் மூலம் அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஆன்லைன் மூலம் முத லீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் நிதி முதலீடு செய்வது தொடர்பாக செல்போன் செயலி மூலம் இணைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அந்த அரசு ஊழியர் இணைப்பை பயன்படுத்தி மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து சிறிய அளவில் குறிப்பிட்ட பணத்தை முதலீடு செய்து சோதனை செய் துள்ளார். அப்போது அதற்கு கூடுதலாக பணம் வந்துள் ளது. இதனை கண்டு மகிழ்ச்சியடைந்து, மேலும் 10 தவணைக ளில் மொத்தம் ரூ.11 லட்சத்து 25 ஆயிரத்தை வங்கி கணக் கில் இருந்து முதலீடு செய்துள்ளார். ஆனால் இந்த முறை அவர் எதிர்பார்த்தது போல் பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் பணத்தை தருமாறு அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டது அறிந்த அரசு ஊழியர் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் புகார் அளித்தார். பின்பு புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் லட்சும ணதாஸ் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோசடியாக ஏமாற்றிய பணத்தை வங்கி கணக்கில் முடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரு கின்றனர். ஆன்லைன் முதலீடு என கூறி அரசு ஊழியரிடமே ரூ.11.25 லட்சம் மோசடி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
உணவு பாதுகாப்பு குறித்து புகாரளிக்க எண்கள் வெளியீடு
உணவு பாதுகாப்பு குறித்து புகாரளிக்க எண்கள் வெளியீடு நாமக்கல், ஏப்.26- உணவு பாதுகாப்பு குறித்து புகாரளிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளதென நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் ச.உமா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி, வாத்து மற்றும் காடை இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச் சிகளை விற்பனை செய்ய வேண்டும். நோயுற்றது போல் அறிகுறிகள் உள்ள பறவைகளை இறைச்சிக்காக பயன்ப டுத்தக்கூடாது. உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச் சிகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து பின்பு பயன்படுத்த வேண்டும். இறைச்சி கடைக ளில் பணிபுரியும் பணியாளர்கள் மருத்துவச்சான்று பெற்றி ருக்க வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டங்களைப் பின்பற்றி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு பொருட்களை தயார் செய்ய வேண்டும் என்று அறி வுறுத்தப்படுகிறது. மேலும், பொதுமக்கள் உணவுப் பொருட் கள் சம்மந்தமாக உள்ள புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், கூகுள் பிளே ஸ்டோரிலி ருந்து Food Safety Consumer App-யை பதிவி றக்கம் செய்தும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்
நாமக்கல், ஏப்.26- குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு நாமக்கல் நகராட்சி ஆணையர் கா.சென் னுகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் நகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் காவிரியை நீரா தாரமாகக் கொண்டு தினசரி 19 மில்லி யன் லிட்டர் குடிநீா் விநியோகம் செய்யப் படுகிறது. அதில், நபர் ஒருவருக்கு தின சரி 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் கடும் கோடை வெப்பம் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்துக் குறைந்து வருகிறது. எனவே, நகராட்சியால் வழங் கப்படும் குடிநீரை குழாய் இணைப்பு பெற்றவர்கள் சிக்கனமாகப் பயன்ப டுத்த வேண்டும். குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் கொண்டு உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். அதையும் மீறி மின்மோட்டார் பயன்படுத்தி நீர் உறிஞ் சுவது கண்டறியப்பட்டால் அந்த மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவது டன், அபராதம் விதிக்கப்பட்டு குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். எனவே, பொதுமக்கள் கோடை காலத்தில் குடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நக ராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் : 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
சேலம், ஏப்.26- மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவிலுள்ள கொதிகலன் குழா யில் வெடிப்பு ஏற்பட்டதில், 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள் ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் செயல் பட்டு வருகின்றன. இதன் மூலம் 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற் பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டு பிரிவுகளி லும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற் பத்தி செய்ய முடியும். இந்நிலையில், மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் 3 ஆவது அலகில் கொதிகலன் குழாயில் வியாழனன்று ஏற்பட்ட வெப்பு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. ஏற்கெ னவே, இரண்டாவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட அலகில் கொதிக லன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரண மாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தடை பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொதி கலன் குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருவ தாக மேட்டூர் அனல் மின் நிலையப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தருமபுரி, ஏப்.26- தருமபுரி மாவட்டத்தில் கோடைகால மாவட்ட அளவில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவு சார்பில், உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டரங்கில், தடகளம், கையுந்துபந்து, இற குபந்து, கபாடி மற்றும் டேக்வாண்டோ ஆகிய விளை யாட்டு போட்டிகள் ஏப்.29 முதல் மே 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி முகாம் நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கட்டணம் தலா ஒருவருக்கு ரூ.200 வீதம் நிர்ணயம் செய்யப் ்பட்டுள்ளது. பயிற்சி கட்டணத்தை இணையதளம் வாயி லாகவே செலுத்த வேண்டும். கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் தங்கள் பெயரினை மாவட்ட விளை யாட்டரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற உள்ள விளையாட்டுகளின் விவ ரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணைய தளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனவு ஆசிரியர் விருதாளர்கள் கல்விச் சுற்றுலா செல்ல ஏற்பாடு
சேலம், ஏப்.26- கனவு ஆசிரியர் விருது பெற்ற வர்கள், கல்விச் சுற்றுலா செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அரசு பள்ளிகளில் அரசு நலத்திட் டங்களை மாணவர்களுக்கு முறை யாக கொண்டு சேர்த்து, கல்வி கற் பிப்பதில் புதுமையைப் புகுத்தி மாண வர்களை வளப்படுத்தி வரும் பன் முகத் திறன் கொண்ட ஆசிரியர்க ளைக் கண்டறிந்து, தேர்வு நடத்தியும், வகுப்பறை செயல்பாடுகளை மதிப்பீடு செய்தும், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை, சிறந்த ஆசிரி யர்களை தேர்வு செய்து ‘கனவு ஆசிரியர்’ விருது வழங்கி கௌர வித்து வருகிறது. சேலம் மாவட் டத்தில் வி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரி யர் கிருஷ்ணமூர்த்தி, பெத்தநாயக் கன்பாளையம் அருகே உள்ள வெள் ளாளப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியர், அத்தனூர் பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சூரியபிரகாசம், ஆத்தூர் ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், அயோத்தியாப்பட்டணம் அருகே வேடப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் இளவரசன், கஞ்சநாயக்கன் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை கெளசல்யா, கஸ் தூரி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி ஆசிரியை மோ.யசோதா, நீர்முள்ளிக்குட்டை அரசு உயர்நி லைப்பள்ளி தமிழாசிரியை செண்பக வல்லி உட்பட 16 பேருக்கு இந்த கல்வி யாண்டுக்கான கனவு ஆசிரியர் விருது கிடைத்தது. அண்மையில் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் நடை பெற்ற விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கனவு ஆசிரியர் விருது வழங்கினார். இதில், 100க்கு 90 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற ஆசிரியர்கள் கிருஷ்ண மூர்த்தி, இளவரசன், சூரியபிரகாசம், விஜயகுமார், கெளசல்யா ஆகிய 5 பேரையும், தமிழக அரசு செலவில் கல்வி சார்ந்த வெளிநாடு சுற்றுலா வும், மற்ற 11 ஆசிரியர்களையும் உள் நாட்டுக்குள் சுற்றுலா அழைத்து செல்லப்படுவதாக அறிவிக்கப்பட் டது. இந்நிலையில், வரும் மே மாதம் மூன்றாவது வாரத்தில் 5 ஆசிரியர் களையும், கல்வி, கலை, தொழில்நுட் பம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகிய வற்றில் சிறந்து விளங்கும் பின் லாந்து, சுவீடன் ஆகிய இரு நாடுக ளுக்கும் அரசு செலவில் விமானத் தில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதாக தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மற்ற 11 ஆசிரியர்களும் உள்நாட்டு சுற்று லாவாக வெள்ளியன்று டேராடூன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை
சேலம், ஏப்.26- கடும் வெயில் அடிப்பதைக் கருத்தில் கொண்டு, சங்ககிரி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே பவானி, ஈரோடு, திருச்செங்கோடு, கோவை ஆகிய பகுதிக ளுக்கு செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று வந்தன. அப்பகுதியில் தொடர்ந்து போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, அப் பேருந்து நிறுத்தத்தை சங்ககிரி வட்டாட்சி யர் அலுவலகம் வடக்குப் பகுதியில் செல்லும் பவானி பிரதான சாலையையொட்டி காவல் துறை மாற்றம் செய்தனர். இப்பகுதியில் கடந்த ஓராண்டாக ஈரோடு, பவானி, திருப் பூர், கோவை, செல்லும் பேருந்துகளும் திருச் செங்கோடு, வேலூர், பரமத்தி செல்லும் பேருந்துகளும் நீதிபதிகள் குடியிருப்புக்கு முன்பு பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கின்றன. இந்த இரு இடங்களிலும் பய ணிகள் நிழற்குடை இல்லாததால், சேலம் மாவட்டத்தில் சராசரியாக 105 பாரன்ஹீட் டுக்கு மேல் வெப்பம் அதிகரித்து வரும் நிலை யில், பேருந்துகளுக்காக காத்திருக்கும் வய தான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலர் மயக்கமடைந்து வருகின்றனர். அப்பகுதி யில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப் படை வசதி கூட இல்லாததால் மிகவும் சிரமத் துக்குள்ளாகின்றனர். எனவே, சங்ககிரி வட்டாட்சியர் அலுவல கம் முன்புள்ள தற்காலிக பேருந்து நிறுத் தத்தை சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் அலு வலகம் அருகேயும், நீதிபதிகள் குடியிருப் புக்கு முன்புள்ள பேருந்து நிறுத்தத்தை கோட்டாட்சியர் அலுவலக முன்பும் மாற்றம் செய்ய வேண்டும். அதோடு அப்பகுதிகளில் பயணிகள் நிழற்குடையும், பெண்கள், மாண விகளுக்கு கழிவறை வசதிகளையும் உடனடி யாக ஏற்படுத்தித் தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
55 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணை நீர்மட்டம்
சேலம், ஏப்.26- மேட்டூர் அணை நீர்மட்டம் 55 அடிக்கும் கீழே சென்ற நிலையில், அணையின் நீர்த் தேக்க பகுதிகளான நாகமரை பரிசல்துறை பகுதியில் உள்ள புராதன சின்னங்கள் வெளியே தெரிய தொடங்கியிருக்கின்றன. பருவமழை பொய்த்ததாலும், காவிரி யில் கர்நாடகா திறக்கவேண்டிய நீரை, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிற கும் திறக்காமல் போனதாலும் மேட்டூர் அணை தற்போது வறண்டு வருகிறது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான நாக மரை, பன்னவாடி, கோட்டையூர், குருக்கலை யனூர், செம்மேடு, ஏமனூர், வட்டனூர் உள் ளிட்ட பகுதிகளில் கரையோர பகுதிகள் முழு வதும் வறட்சி நிலவி வருகிறது. ஆங்காங்கே வெடித்த நிலையில் நீர்த்தேக்க பகுதி காணப்படுகிறது. சுமார் 55 அடிக்கும் கீழே மேட்டூர் அணையின் நீர்மட்டம் சென்றுள்ளது. இதனால், அணையின் நீர்த்தேக்க பகுதி களில் புராதன சின்னங்கள் வெளியே தென் படுகிறது. அதாவது, நாகமரை பரிசல்துறை பகுதியில் மூழ்கிக்கிடந்த நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம், நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலய கோபுரம், கோட்டை சுவர் ஆகியவை முழுவ துமாக வெளியே தெரிகிறது. தொடர்ந்து 6 ஆண்டுகளாக வற்றாமல் இருந்த மேட்டூர் அணை கடந்தாண்டு வற்றியது. இந்நிலையில், இந்த ஆண்டும் மேட்டூர் அணை வற்றி வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் 102 அடி மேட்டூர் அணையில் இருந் தது. ஆனால், தற்போது 54 கனஅடி நீர் மட்டுமே உள்ளது. நீர் வரத்து வெறும் 56 கனஅடி நீர் மட்டுமே விநாடிக்கு வந்து கொண் டுள்ளது. குடிநீருக்காக 1500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை கடும் வறட்சியை சந்திக்கும் என கூறப்படுகிறது.