திருப்பூர், மே 27 - பரம்பிக்குளம் ஆழியாறு (பிஏபி) பாசனத் திட்டத்தில் ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்டக் கோரி ஜுன் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் “நம்ம நல்லாறு நடைபய ணம்” நடத்துவதென்று தமிழ்நாடு விவசாயி கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உடு மலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பல்ல டம், தாராபுரம், பொங்கலூர், காங்கேயம், திருப்பூர் தெற்கு ஆகிய இடைக்கமிட்டிகளின் நிர்வாகிகள் கூட்டம் சனியன்று பல்லடத்தில் உள்ள விவசாயிகள் சங்க மாவட்டக்குழு அலு வலகத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன் தலைமையில் நடைபெற்றது. பல்ல டம் ஒன்றிய செயலாளர் வை.பழனிசாமி வர வேற்றார். நடைபயண இயக்க அவசியம் குறித்து மாவட்ட செயலாளர் ஆர்.குமார் உரையாற்றினார். இக்கூட்டத்தில் உடுமலை ஒன்றிய நிர்வாகிகள் ஏ.ராஜகோபால், த. அருண்பிரகாஷ், பல்லடம் ஒன்றிய நிர்வாகி கள் கே.வி.சுப்பிரமணி, எஸ்.லோகநாதன், தாராபுரம் தாலுகா நிர்வாகி ஆர்.வெங்கட்ரா மன், பெல்லம்பட்டி அ.லெனின், திருப்பூர் தெற்கு யேசு, பொங்கலூர் பெ.ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு (பிஏபி) பாசனத் திட்டத்தில் ஏற்பட்டு வரும் நீர் பற்றாக்குறையை போக்கவும், பாசன விவசா யிகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பயிர் செய்து உணவு உற்பத்தியை பெருக்கவும், ஆனைமலையாறு - நல்லாறு அணைத் திட் டங்களை விரைவாக நிறைவேற்ற வேண் டும் என திருப்பூர், கோவை மாவட்ட விவசா யிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவ்வப்போது அரசுகள் நிபுணர் குழு அமைப்பது போன்ற அறிவிப்புகளும் வெளி யிடப்படுகிறது. ஆயினும் இத்திட்டத்தின் அவசியம் குறித்து போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே இனியும் தாம தம் செய்யாமல் இந்த அணைத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் “நம்ம நல்லாறு நடைபயணம்” வரும் ஜூன் 10, 11, 12 தேதிகளில் பல்லடம் அருள்புரத்தில் துவங்கி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம் ஒன்றி யங்கள் வழியாக உடுமலைப்பேட்டையை அடைந்து கோரிக்கை விளக்க பொதுக்கூட் டம் நடத்தப்படுகிறது. ஜூன் 10 ஆம் தேதி யன்று துவக்க நிகழ்வில் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி. டில்லிபாபு ஆகியோர் பங்கேற்கின்றனர். ஜூன் 12 ஆம் தேதியன்று பொதுக்கூட்டத் தில் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கலந்து கொண்டு உரை யாற்றுவார். எனவே இந்த நடைபயண இயக்கத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண் டும் என தமிழ்நாடு விவசாய சங்க திருப்பூர் மாவட்ட குழு கேட்டுக் கொண்டுள்ளது.