இளம்பிள்ளை, பிப்.6- சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணமார்கோவில் பகுதியில், உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.1.43 லட்சம் மதிப்பிலான 570 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் பேரூ ராட்சிக்குட்பட்ட அண்ணமார் கோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கோவிந்தராஜன் தலைமை யிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் காவேரி நகர் பகுதியிலிருந்து, இளம்பிள்ளை பகு திக்கு சென்ற மினி டெம்போவை நிறுத்தி சோதனை மேற் கொள்ளப்பட்டது. அதில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 570 சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறி முதல் செய்து, தேவூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரேவதியிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இளம் பிள்ளையில் உள்ள ஜவுளி கடைக்கு நெசவு தொழிலா ளர்கள் உற்பத்தி செய்த சேலைகளை கொண்டு சென்றது தெரியவந்தது. இதன்பின் உரிய ஆவணங்கள் கொண்டு வந்து அதிகாரியிடம் காண்பித்த பின்னர் சேலைகளை விடுவித்தனர்.