திருப்பூர், பிப். 6 - 19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா 2023இல் மொத்தம் 1 லட்சம் பார்வையா ளர்கள் கலந்து கொண்டனர். இதில் ரூ.2 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையானது என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2022- 2023 ஆம் ஆண்டிற்கான பொது வரவு செலவு திட்டத்தின்போது நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக் கிய பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழ்நாட் டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண் காட்சி நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் புத்தக கண்காட்சியை ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி முடிய திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் நிறுவனமும் சேர்ந்து முதன்முறையாக நடத் தினர். மாநில செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப் பூர் மேயர் ந.தினேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுபினர்கள் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத் தனர். அதனைத் தொடர்ந்து புத்தகக் கண்காட் சியில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், கருத் தரங்கம், இசை நிகழ்ச்சி போன்றவையும் நடைபெற்றது.
மேலும், புத்தகத் திருவிழாவிற்கு விழிப் புணர்வு ஏற்படுத்த ஜனவரி 24 அன்று காலை 10.30 முதல் 11.00 மணிவரை பள்ளிகள், கல் லூரிகள், அரசு அலுவலகங்களில் வாசிப்பு நேரம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், ஜனவரி 8 அன்று பள்ளிகளில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 424 பேர் பரிசு பெறத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ்க ளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. புத்தகக் கண்காட்சி அரங்கத்தில் மொத்தம் 152 அரங் குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 125 புத் தக அரங்குகளும், 27 அரசுத் துறை சார்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்டன. போக்குவரத்துக்கு இடையூறின்றி உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டது. தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்பு லன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. மேலும் பல லட்சம் புத்தகங்கள் இடம் பெற் றன. இதில் புத்தகங்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டது. இதனால் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பய னடைந்தனர். இப்புத்தகத் திருவிழாவில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் மாணவ, மாணவியர் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்ட னர். தோராயமாக ரூ.2 கோடிக்கு புத்தகங் கள் விற்பனை ஆனது. பொதுமக்களுடன் கல் லூரி மாணவ, மாணவியரும் கலந்து கொண்ட னர். அரசின் திட்டங்கள், அரங்கினுள் வங்கி, கல்வித்துறை, மருத்துவத்துறை, மகளிர் திட் டம், உணவுக்கூடம், பெண்கள் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், சிறு சேமிப்புத்துறை, போதை தடுப்பு, வாக்கு ரிமை விழிப்புணர்வு, குழந்தை தொழிலா ளர் ஒழிப்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் இடம் பெற்றிருந்தன. மேலும், இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முக்கிய பிர முகர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்தார்.