இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதையற்ற தமிழ்நாடு என்பதை வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வட்டச் செயலாளர் குப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் குறளரசன், வட்டக் குழு உறுப்பினர் பவிஸ், துரைராஜ் ரவி, கிரி, மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போதைக்கு எதிராக கையெழுத்தி இட்டனர்.