பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர், செவிலியர்களை நியமிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர், காளியாபுரம் பிரிவில் கையெழுத்து இயக்கம் திங்களன்று நடத்தினர். இதில், சிபிஎம் ஆனைமலை தாலுகாச் செயலாளர் பரமசிவம், கிளைச் செயலாளர் சி.சஞ்சீவி மற்றும் விதொச மாவட்டச் செயலாளர் ஏ.துரைசாமி உள்ளிட்aடோர் பங்கேற்றனர்.