districts

img

பூம்புகார் கல்லணைச் சாலையில் இரு சுரங்கப் பாதைகள்

கும்பகோணம், பிப்.27 - தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள சுவாமி மலையில், பூம்புகார் கல்லணை சாலை தடுப்பு நீக்கும் குழு மற்றும் சுவாமிமலை லயன் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினரும், நகாய் திட்டநிலைக் குழு உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கும்பகோணம் சுவாமிமலை வழி யாக செல்லும் பூம்புகார் கல்லணை சாலையில் புளியஞ்சேரியில் பை பாஸ் அருகே நேர் சாலையை தடுத்து போக்குவரத்து மாற்றப்பட்டது. இதன் காரணமாக தடுப்பை நீக்கி  நேர் பாதை அமைத்திட வலியுறு த்திய மக்களின் கோரிக்கை நகாய் திட்ட அதிகாரிகளால் ஏற்கப்படவில்லை.

கோவை எம்.பி.யிடம் கோரிக்கை
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கும்ப கோணத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் சாலையை பார்வை யிட்டு, உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை தொடர்பு கொண்டு, மக்களின் நியாய மான கோரிக்கையை நிறைவேற்றித் தர கேட்டுக் கொண்டார்.

அவரின் வழிகாட்டுதல்படி, ஒருங்கிணைப்பாளர்கள் கோதண்ட பாணி, ராஜகோபாலன் உள்ளிட்ட பூம்புகார் கல்லணை சாலை தடுப்பு நீக்கும் ஒருங்கிணைப்பு குழு வினர், கோவை சென்று நாடாளு மன்ற உறுப்பினரிடம் இந்த கோரி க்கையை விளக்கி பேசினர். அவரும் நகாய் திட்ட உயர் அலுவலர்களி டமும், ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சரிடமும் பேசினார்.

இதன் பலனாக, மேம்பாலத்தை சுற்றிச் செல்வதற்கு பதிலாக, வாக னங்கள் நேராக செல்லும் வகை யில் இரு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நேர்வழிப் பாதை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நிறை வேற உதவிசெய்த கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், சிபிஎம் அரசியல் தலைமை  குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப் பட்டது.

மேலும் மாபெரும் இத்திட்ட த்தை நிறைவேற்றித் தர, அனை த்து வகையிலும் உதவி செய்தவர் களும், கிராம சபையில் தீர்மா னம் நிறைவேற்றிய ஊராட்சி மன்றத் தலைவர்களும் கௌரவிக்கப்பட்ட னர். இவ்விழாவிற்கு ஒருங்கிணைப் பாளர் எம்.கோதண்டபாணி தலைமை வகித்தார். லயன் சங்க  தலைவர் ஜெய்சங்கர், விவசாயத் தொழிலாளர் சங்க நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் சங்க பழ.அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபாலன் வரவேற்றார். சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் ஏற்புரை ஆற்றினர்.

இத்திட்டத்திற்கு உறுதுணை யாக இருந்த மாற்றுத் திறனாளிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், ஓய்வூதியர்கள் சங்கம், சுவாமிமலை லயன் சங்கம், காவேரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சுவாமிமலை விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், வேன்-ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், இவாஸ் நலச் சங்கம், வாலிபர் சங்கம், தமிழ்நாடு அரசு ஓய்வூதி யர் சங்கம், அனைத்து தன்னார்வலர் கள், பொதுமக்கள், பொதுநல சங் கங்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திம்மக்குடி விவசாயிகள் சங்கம் ஏ.செங்குட்டு வன் நன்றி கூறினார்.