districts

img

மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச பயண அட்டை வழங்குக! ஓய்வூதியர்கள் சங்க பேரவை வலியுறுத்தல்

கும்பகோணம், ஜூன் 9- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்க கும்பகோணம் வட்டக் கிளை சார்பில்  8 ஆவது வட்டப் பேரவை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

பேரவைக்கு வட்டத் தலைவர் துரைராஜ்  தலைமை வகித்தார். வட்டத் தணிக்கையாளர் வைரமுடி கிருஷ்ணகுமார் முன்னிலை வகித் தார். வட்ட துணைத் தலைவர் கலைச்செல்வி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வட்ட  துணைத் தலைவர் சண்முகம் வரவேற்றார்.  தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில துணைத்  தலைவர் ம.கண்ணன் துவக்கவுரையாற்றி னார். 

வட்டச் செயலாளர் பக்கிரிசாமி வேலை அறிக்கையும், பொருளாளர் ராமமூர்த்தி நிதி நிலை அறிக்கையும் வாசித்தனர். பேரவையை  வாழ்த்தி மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, மாவட்டச் செயலாளர் தமிழ் மணி, துணைத் தலைவர் அன்புமணி, பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் சங்க ராமமூர்த்தி, சத்துணவு ஓய்வூதியர் சங்கம் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். மாநிலத் தலைவர் என்.எல்.சீதரன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் நன்றி தெரிவித்தார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் பண்டிகை  போனசாக வழங்கிட வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படி ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கம்யூடேசன் காலத்தை 15 ஆண்டி லிருந்து 12 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும். 

மூத்த குடிமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு  முழுவதும் செல்ல இலவச பேருந்து, ரயில் பாஸ்  வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் அனைத்து  வகையிலும் பயன்பெறுமாறு, பிற மாநிலங்க ளின் உள்ளதை போல மருத்துவ சிகிச்சை திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் அவர்கள் குடும்பத்தினருக்கு குடும்பப் பாதுகாப்பு நிதியை  ரூபாய் ஒன்றரை லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 70 வயது துவங்கியவுடன் கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீ தம் வழங்க வேண்டும்.

கும்பகோணம் சார்நிலை கருவூலத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால், ஓய்வூதி யம் குடும்ப ஓய்வூதியம் மற்றும் இதர பணப்  பலன்கள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படு கிறது. எனவே காலியாக உள்ள பணியிடங்களை  உடனே நிரப்பிட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூ தியம் ரூ.7850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக வட்டத்தின் சார்பில் ஓய்வூதியர் இதழின், ஆயிரம் சந்தாவிற்கான தொகை, மாவட்டப் பொருளாளர் கோவிந்தராஜனிடம் வழங்கப்பட்டது.