கிருஷ்ணகிரி, ஜன. 2- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கெல மங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினரும் வாலிபர் சங்க தேன்கனிக்கோட்டை வட்டத் தலைவருமான டி.சங்கர், அண்மையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) உயிரிழந்தார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சு ண்டன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், சாம்ராஜ், பிரகாஷ், சுரேஷ், தளி ஒன்றியச் செய லாளர் வெங்கடேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் திங்கட்கிழமை (ஜன. 2) தேன்கனிக்கோட்டையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.