கிருஷ்ணகிரி,டிச 21- ஓசூர் மாநகராட்சிக் குட்பட்டட அரசனட்டியில் கால்வாய் கரை சாலை யிலுள்ள மின் கம்பங்க ளின் கான்கிரீட் உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சிய ளிக்கிறது. அதே போல், மின் மாற்றியும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கீழே விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து மின்துறை பணியாளர்கள், கம்பியாளர், மேற்பார்வையாளர் என பலருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். பெரிய ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக மின்துறையும் மாநகராட்சி நிர்வாகமும் சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.