districts

ஓசூர் விமான நிலையத்தை கைவிட்ட ஒன்றிய அரசு தொழில் முனைவோர் கடும் எதிர்ப்பு

கிருஷ்ணகிரி,பிப் 14- பெங்களூரு விமான நிலையத்தி லிருந்து 150 கி.மீ. சுற்றளவுக்குள் வேறு விமான நிலையங்கள் அனு மதிக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஒசூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உதான் திட்டப்படி சென்னை - ராமநாதபுரம் இடையே விமா னங்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் கேள்விக்கு பதில் அளித்த விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் 2033-க்கு முன்னர் கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் (பெங்களூரு விமான நிலையம்) இருந்து 150 கி.மீ. சுற்றளவுக்குள் புதிய விமான நிலையங்களை அமைக்கவும், மேம்படுத்தவும் அனுமதிக்கக் கூடாது என ஒப்பந்தம் உள்ளது. இதனால், ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு அனு மதியில்லை என்று கூறியுள்ளார். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் கர்நாடக மாநிலம், மைசூரு மற்றும் ஹாசன் 2 விமான நிலையங்களும் 150 கி.மீ. தொலைவுக்கு உள்ளாகவே அமைக்கப்பட உள்ளன. கர்நாடக மாநிலத்தில் அனுமதித்த ஒன்றிய அரசு, தமிழகத்தில் உள்ள ஓசூருக்கு அனுமதி மறுத்து துரோகம் இளைத்துள்ளது. உதான் திட்டத்தின் கீழ் விமா னங்களை இயக்கும் வகையில் சேலம், நெய்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர், வேலூர் விமான நிலை யங்கள் மேம்படுத்தப்பட்டு வரு கின்றன. நெய்வேலி, வேலூர் விமான நிலையங்களுக்கு உரிமம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. தஞ்சாவூருக்கு, இந்திய விமானப்படை நிலங்கள் வழங்கப்பட உள்ளது. ராமநாத புரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மாநில அரசு ஒப்படைக்க உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மோடி பிரதமரானதும் ஓசூரில் உடனடியாக விமான நிலையம் அமைக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் கனவு திட்டமான ஓசூர் -கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை ரயில் வழித்தடமும் உடனடியாக அமைக்கப்படும் என்று 10 ஆண்டு களுக்கு முன்பு பாஜகவினர் வாக்குறுதிகள் அளித்தனர். அண்மையில் கூட பாஜக செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்பியுமான நரசிம்மன்,“ ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில்வே திட்டத்துக்கு ரூ. 1,950 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்றார். ஆனால், ஒன்றிய நிதிய மைச்சர் தாக்கல் செய்த அறிக்கை யில் இத்திட்டம் குறித்து அறி விப்பு வெளியாகவில்லை. பெரும் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. இதுகுறித்து ஓசூரின் சிறு,குறுந் தொழில் முனைவோர் (ஹோஸ்டியா) சங்கத் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான ஓசூரில உதான் திட்டத்தில் விமான நிலையம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை 3 ஆண்டுகளுக்கு முன்பே ஒன்றிய அரசு வெளியிட்டது.. ஆனால், தற்போது கர்நாடக மாநிலத்தில் 150 கி.மீ. தொலைவுக்குள் உள்ள மைசூரு, ஹாசன் ஆகிய 2 இடங்களுக்கு உதான் திட்டத்தில் விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கிய ஒன்றிய அரசு, ஓசூருக்கு அனுமதி மறுத்துள்ளது, ஒரு கண்ணில் வெண்ணைய் யையும், மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்தது போல உள்ளது” என்றார். அதேபோன்று தொழிற்துறையின ரின் 30 ஆண்டுகால கனவுத் திட்டமான ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில்வே திட்டம் குறித்தும் அறிவிக்காத ஒன்றிய மோடி அரசின் துரோக செயல்கள கிருஷ்ணகிரி மாவட்ட   தொழிற்துறையினருக்கு  பெரும் அதிர்ச்சியையும்,வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்று தொழில் முனைவோர்களும் சமூக ஆர்வலர்க ளும் கூறுகின்றனர்.