districts

10 ஆண்டுகாலமாக தீயணைப்பு நிலையம் இல்லாத சூளகிரி!

கிருஷ்ணகிரி, மார்ச் 19- கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி யுள்ள சூளகிரி வட்டம் தொழில் மற்றும் வர்த்தகத்தில் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வரு கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தனி வட்டமாக அறி விக்கப்பட்டு சுமார் 10 ஆண்டு கள் கடந்துள்ளது. இந்த வட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலை கள் உள்ளன. மேலும், 25க்கும் மேற்பட்ட கோழி பண்ணையும் உள்ளன. இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாகும். சூளகிரியில் தீ அணைப்பு நிலையம் அமைப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்துரு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும், இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு உடனடியாக தீய ணைப்பு நிலையம் அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.