கிருஷ்ணகிரி, மே 24- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் கவுண்டனூர் அடுத்த பள்ளத்து கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 103 வயது மூதாட்டி துளசி யம்மாள். இவருக்கு 3 மகன், 7 மகள் உள்ளனர். இவரின் கணவர் லட்சு மணன் இறந்த பிறகு மகன்கள் மாணிக்கம், சண்முகம், ஆறுமுகம் ஆகிய மூவரும் 5.5 ஏக்கர் நிலத்தை பிரித்து எடுத்துக் கொண்டனர். அத்துடன் தாய் துளசியம்மாளை தவிக்க விட்டுள்ளனர். இந்நிலையில், சாப்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு உதவி செய்யும்படி மகன்களிடம் தாய் துளசியம்மாள் பலமுறை கேட்டும் மகன்கள் மூவரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வேதனையடைந்த துளசி யம்மாள் தனது பராமரிப்பு செலவுகளுக்கு ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே மகன்கள் பணம் வழங்க வேண்டும், இறந்துவிட்ட தன் கணவன் லட்சுமண கவுண்டர் பெயரில் உள்ள நிலத்தை மகன்களிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்துள்ளார். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதியளித்துள்ளனர். மூன்று மகன்கள் கைவிட்ட நிலையில் தற்போது அவரது மகள் நாகம்மாள் இவரை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.