districts

பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள், செடிகள் விற்பனை

கிருஷ்ணகிரி, டிச. 17- பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள், செடிகள் விற்பனை செய்யப்படுவதாக, ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் பரசுராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பையூர் மண்டல ஆராய்ச்சி நிலை யத்தில் விதைகள், செடிகள் மற்றும் உயிர் உரங்கள் விற்ப னைக்கு உள்ளது. நெல்விதை பையூர் 1 (கிலோ ரூ. 40), ராகி விதை  பையூர் 2 (கிலோ ரூ.52), முருங்கை  விதை பிகேஎம் 1(கிலோ ரூ.3000),  காய்கறி தோட்டத்திற்கு தேவை யான காய்கறி விதைகள் பாகற்காய் (கோ1), புடலை (பாலூர் 1 மற்றும் பாலூர் 2), மற்றும் பீர்க்கங்காய் (பிகேஎம்1), மா ஒட்டு செடிகள் அனைத்து ரகங்களும் (செடி ரூ.40) கிடைக்கும். காய்கறி தோட்டத்திற்கு தேவை யான ஒட்டு கத்திரி செடிகள் விவசா யிகள் விரும்பிய ரகங்களுக்கு ஒட்டுகட்டி (செடி ரூ.8) தரமான ஒட்டு  நாற்றுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான அழகு தாவரங்கள், மூலிகை செடிகள் மற்றும் பழ வகை செடிகளான ஒட்டு செடிகள் (மாதுளை, நெல்லி மற்றும் கொய்யா) இங்கு கிடைக்கும். மேலும், உயிர் எதிர்கொல்லிகளான பேசில்லஸ் சப்டிலிஸ் (கிலோ ரூ.168) மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி (கிலோ ரூ.168) கிடைக்கும். இதை பயன்படுத்துவதால் பயிர்கள்  மற்றும் செடிகளுக்கு நோய்கள் தாக்காது. மேலும், இயற்கை உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் (கிலோ ரூ.60), பாஸ்போபாக்டீரியா (கிலோ ரூ.60), ரைசோபியம் (கிலோ ரூ.60), வேம் (கிலோ ரூ.60), தென்னை டானிக் (லிட்டர் ரூ.325), மண்புழு உரம் (கிலோ ரூ.10),  மற்றும் விவசாயிகள் மண்புழு உரம் தயாரிப்பதற்கு தேவையான மண்புழு (கிலோ ரூ.375) கிடைக்கும்.  மேற்கூறிய விதைகள், செடிகள், உயிர் உரங்கள் மற்றும் உயிர் எதிர் கொல்லிகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.