districts

img

கிணற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஏப். 5- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம்,  பெட்ட முகிலாலம் மலைப் பகுதியில் 28க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதில்  ஒன்றான மூக்கினிகிரி கிராமத்தில்  60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு 60 ஆண்டு களுக்கு முன்பு தோண்டப்பட்ட கிணறுதான் இந்த கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. தற்போது, இந்தக் கிணற்றின் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் கிணற்று நீர் மாசடைந்து, குப்பை குளமாக குடிப்பதற்கு தகுதியற்ற நிலை யில் உள்ளது. இதனால் அந்த  மக்கள் நீரின்றி கடும் சிரமப்பட்டு  வருகின்றனர். இதுகுறித்து பல முறை மனு அளித்தும் இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடி யாக கிணற்றை சீரமைக்க உடனே  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.